Sunday, 27 May 2018


புங்கை மரம் பற்றிய தகவல்கள் :

தென் இந்தியாவை தாயகமாக கொண்டது புங்கன் மரம். புங்கை, புங்கு, பு+ந்தி, சுரஞ்சகம் என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. புங்கை மரம் தமிழ்நாட்டின் பழமையான மரங்களில் ஒன்று.

காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று. புங்கன் மரம் அதிக உயரம் வளர்வது இல்லை. மெதுவாக வளரும் தன்மை உடையது.

விதை மூலம் இனப்பெருக்கம் செய்வது அதிகம். ஆனால் குச்சிகளை கொண்டும் வளர்க்கப்படுகின்றன. அதிவேக புயல் காற்றில் கூட சாயாமல் இருக்கும். ஆணிவேர் நீளமாக காணப்படும்.

வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூ போன்று காணப்படும். இம்மரப் பூக்கள் மூலிகை மருந்தாகவும் பயனளிக்கிறது.

புங்கன் விதையில் இருந்து கிடைக்கும் புங்க எண்ணெய், பூச்சி விரட்டியாகவும், பயோ டீசல் ஆகவும், மாடுகளுக்கு கோமாரி நோயால் ஏற்படும் புண்களை ஆற்றுவதற்கும் பயன்படுகிறது.

குறிப்பாக நிழல் பயன்பாட்டிற்காக மட்டுமே புங்கன் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. இந்த பயன் மட்டுமன்றி இயற்கை விவசாயத்திற்கு பசுந்தாள் உரமாக முக்கிய பங்கு வகிக்கிறது.

இலைகள் கசப்பு தன்மை உடையதால் இவற்றை மண்ணில் இடும் போது இளம் வயதில் பயிர்களை தாக்கும் நோய்கள் கட்டுப்படுகின்றன.

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்தப்படியாக புங்க மரம் உள்ளது. இது மட்டுமன்றி இலைகள் சிறிது தடித்து காணப்படும். புங்கன் மரங்களில் இலைகள் அடர்த்தியாக இருப்பதால் வெயில் காலங்களில் மிக குளிர்ச்சியான நிழல் தரும்.

இளவேனில் காலத்திற்கு முன்பே இலைகளை உதிர்க்கும், இதனால் நிழலுக்காக அதிகம் நடப்படுகின்றன. இவற்றின் இலைகள் மண்புழு உரம் தயார் செய்யப் பயன்படுகிறது. மரக்கட்டைகள் எரிபொருளாக பயன்படுகிறது.

புங்கன் புண்ணாக்கு தழைச்சத்து மிக்க உரமாக உள்ளது. இவற்றை நாம் கண்டிப்பாக சாலைகள் ஓரங்களில் நடுவதன் மூலம் சரியான பருவத்தில் சரியான மழை பெய்யும்.

பல பறவைகள் விரும்பி இம்மரங்களில் கூடு கட்டுகின்றன. காரணம் இலைகள் அடர்த்தியாக இருப்பதால் அவற்றிற்கு எதிரிகள் தொல்லை முற்றிலும் இருக்காது. அணில் போன்ற சிறு விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

மண்ணின் உயிரிகள் :


மண்ணின் மேற்பரப்பு, உண்மையில் உயிர்களின் தோட்டம் போன்றது. மண்ணுக்கு அடியில் செல்லச் செல்ல உயிரிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. கண்ணால் காண முடியாத உயிரிகளான குச்சிலங்கள் (பாக்டீரியாக்கள்) பூஞ்சாளங்கள், கதிர்க் காளான்கள் (ஆக்டினோமைசிஸ்) முந்துடலிகள் (புராட்டோசோவா) போன்றவை தவிர, கண்ணால் கண்டறியக்கூடிய பல உயிரினங்கள் மண்ணை வளப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அவற்றைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மண்ணில் மண்புழுக்கள், கரையான்கள், மரவட்டைகள், பூரான்கள் என்று பலவும் உள்ளன. குறிப்பாகக் கரையான்களைப் பற்றி ஒரு தவறான கருத்து உள்ளது. அதாவது கரையான்கள் செடிகளைத் தின்றுவிடும் என்று பல உழவர்களே கூறுவது உண்டு. அது மட்டுமல்ல; கரையான்களைக் கொல்வதற்கு டன் கணக்கில் மண்ணில் நஞ்சைக் கொட்டி வருகிறோம். உண்மையில் கரையான்கள், இறந்த தாவர உடலங்களைத்தான் உண்ணுகின்றன.

குப்பை மேட்டை தடுக்கும் :

உயிருள்ள செல்களை உண்பதற்குரிய வாயமைப்பு கரையான்களுக்குக் கிடையாது. ‘தழைத்தேம்’ (செல்லுலோஸ்) எனப்படும் தாவரங்களின் இறந்த உடலப் பொருளை அரைத்து உண்ணும் முறையிலேயே கரையான்களின் வாயமைப்பு உள்ளது.

கரையான்கள் எறும்புக் குடும்பத்தைச் சேர்ந்தவையல்ல; அவை கரப்பான் பூச்சிக் குடும்பத்துக்கு நெருக்கமானவை. எறும்புகளைப் போல் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. கூட்டுக் குடும்ப வாழ்விலும் கூட்டுறவுச் செயல்பாட்டிலும் இயங்குபவை. தனித்து வாழ இயலாதவை. இவை இல்லாவிட்டால் இந்த உலகமே முழுமையான குப்பை மேடாக மாறியிருக்கும்.

காடுகளில் விழுகிற மரங்களும் இலைகளும் எங்கு பார்த்தாலும் குவிந்தே கிடக்கும். பட்டுப்போன மரத்துண்டுகளில் இருந்து காய்ந்த சருகுகள் வரையான அனைத்து மட்கும் பொருள்களையும் கரையான்கள் தின்று, அதாவது மறுசுழற்சி செய்து புவிப்பந்தை உயிரோட்டத்துடன் வைத்துள்ளன.

கரையான்களில் அரசர்களும் அரசிகளும் உண்டு. இந்த இரண்டு பேரும் பணியாளர் கரையான்களை உருவாக்குகின்றன. இந்தப் பணியாளர்களில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவு உணவைத் தேடுவது, கொண்டு வந்து சேர்ப்பது போன்ற பணிகளைச் செய்கிறது. மற்றொரு பிரிவு படைவீரர்களாகச் செயல்பட்டு கூட்டத்தைக் காக்கிறது. இப்படி ஒரு கூட்டு வாழ்க்கை நடத்தும் கரையான்கள் வேளாண்மையில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதாவது மண்ணை வளப்படுத்தும் பணியில் இவை பெரிதும் ஈடுபடுகின்றன. கரையான்களின் பணி கடல்போல் பெரியது.

முழு தாவர உணவு :

மண்ணில் துளை இட்டு காற்றோட்டம் ஏற்படக் கரையான்கள் வழிவகுக்கின்றன. நீரை மண்ணுக்குள் செலுத்த உதவுகின்றன. பெரிய கரையான் புற்றுகளைக் காணும்போது, அவற்றின் சிறப்பு நமக்குப் புரியும். புற்று மண் உடல்நலத்துக்கு முதன்மையான பங்கை வகிக்கிறது. மண் குளியல் எனப்படும் இயற்கை மருத்துவ சிகிச்சைக்கு அடிப்படை இந்தப் புற்றுமண் என்றால் மிகையாகாது.

மண்வளத்தைப் பொறுத்த அளவில் தாவரக் கழிவுகளை நொதித்தல் முறையில், அதாவது வாயில் உள்ள நொதிகளின் உதவியோடு வளமான மட்காக கரையான்கள் மாற்றுகின்றன. இன்னும் நுட்பமாகக் கூற வேண்டுமானால், மிகவும் நுண்ணிய உயிர்கள் இருக்கும் இடத்தில் அதிக அளவில் உயிர்மக் கரிமம் உண்டாகும் (organic matter). ஆனால், மட்கு ஆவதில் அது ஒரு குறிப்பிட்ட நிலைதான், அதையும் தாண்டிச் செல்ல வேண்டும்.

அதற்குக் கரையான்கள், மண்புழுக்கள் போன்ற சற்றே பெரிய உயிரினங்கள் தேவைப்படுகின்றன. அதாவது இலை தழைகளை, மரத்துண்டுகளைக் குச்சிலங்களும் பூஞ்சாளங்களும் ஒரு கட்டத்துக்குச் சிதைக்கின்றன. அவற்றை முழுமையாகத் தாவர உணவாக மாற்றுபவை கரையான்கள், மண்புழுக்கள், மரவட்டைகள் போன்றவை.

அழிக்க நஞ்சு வேண்டாம் :

மண் வளத்தில் கரையான்கள் பல முன்னேற்றங்களைச் செய்திருப்பதை பர்கினோபாசோ, சகேல் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக மண்ணின் வேதியியல் தன்மைகூட உயர்ந்துள்ள நிலையை தாகுயா அபே, டேவிட் பிக்நெல், கிகாஷி (Takuya Abe, David Edward Bignell, Masahiko Higashi, T Higashi) போன்ற மண்புழு ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இது தவிர பண்ணையில் கோழிகளுக்கு, குறிப்பாக வளர் இளம் குஞ்சுகளுக்குக் கரையான்கள் மிகச் சிறந்த தீனி. ஒரு பானையில் சிறிது கிழிந்த சாக்கு, துணிகளைப் போட்டு கொஞ்சம் சாண நீரையும் ஊற்றி மண்ணில் கவிழ்த்து வைத்தால் ஒரு வாரத்தில் பானைக்குள் ஏராளமான கரையான்கள் வளர்ந்திருக்கும். அவற்றைக் கொடுத்தால் குஞ்சுகள் மிக வேகமாக வளர்ச்சி பெறும்.

வீடுகளில் கரையான்கள் நமக்கு இடைஞ்சலாக இருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த எளிய முறைகளைப் பின்பற்றலாம். நஞ்சுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. தார் எண்ணெய், முந்திரி எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி விரட்டலாம்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
நாய் வளர்ப்பு பாகம் - 9

நாய் வளர்ப்போரின் சில தவறான நம்பிக்கைகளும் விளக்கங்களும் :

சமூகத்தில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி நாட்டு நாய் முதல் வெளிநாட்டு நாயினங்கள் வரை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். உலகமே கணினிமயமான காலகட்டத்திலிருந்தாலும் நாய் வளர்ப்போரிடம் இக்காலத்திலும் சில தவறான நம்பிக்கைகள் உள்ளன என்பதை மறுக்க இயலாது. இப்பிரச்சனையை மையமாக வைத்து அதற்கு விளக்கமளிக்கும் வகையிலும் தீர்வுகாணும் உரையாடல் கொடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி : நாயின் உணவில் உப்பைக் சேர்ப்பதனால் அதற்கு தோல் அரிப்பு மற்றும் தோல்வியாதிகள் வரும் என்பது உண்மையா?

பதில் : நாயின் உணவில் உப்பைச் சேர்ப்பதற்கும் அதற்குத் தோல் அரிப்பு மற்றும் தோல்வியாதிகள் வருவதற்கும் சம்பந்தமில்லை. உப்பே சேர்க்காமல் விட்டுவிட்டால் நோய்கள் மற்றும் சத்துக் குறைபாடு உண்டாக வாய்ப்புள்ளது.

கேள்வி : வேகவைக்காத பச்சை மாமிசத்தை நாய்களுக்குக் கொடுப்பதனால்தான் அதற்கு அதிக ஆக்கிரமிக்கும் பழக்கமும், மனிதர்களையும் மற்ற விலங்குகளையும் துரத்திக் கடிக்கும் பழக்கமும் வருகிறது என்ற நம்பிக்கை உள்ளது. இது சரியா?

பதில் : இந்தக் கருத்தில் உண்மையில்லை. எனினும், வேகவைக்காத பச்சை மாமிசம் மூலம் நாய்களுக்குச் சில நோய்கள் வர வாய்ப்புண்டு.

கேள்வி : நாய்களுக்கு வெளியில் தயாரிக்கப்படுகின்ற ஆயத்த உணவுகள் நல்லதா? அல்லது, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு நல்லதா?

பதில் : நாய்களுக்கென வீட்டில் தயாரிக்கப்படுகின்ற உணவு வகைகள் சமச்சீர் உணவுப்பொருள்களைக் கொண்டதாகவோ மற்றும் சரிவிகிதத்தில் தயாரிக்கப்பட்டதாகவோ இருக்க வாய்ப்புக் குறைவு. சில நல்ல தரமான நிறுவனங்களால் தயாரிக்கப்படும் நாய் உணவுகள் சமச்சீரான உணவுப்பொருள்களுடன் சரிவிகிதத்திலும் தயாரிக்கப்பட்டு அதற்கென உள்ள உயர்மட்டத் துறைசார் வல்லுநர்களால் அங்கீகரிக்கப் பட்டவை. மேலும் வயதுக்கேற்ற வகையிலும், குட்டிகள், கருவுற்ற நாய்கள் மற்றும் பாலுட்டும் நாய்களுக்கென அவற்றின் தேவைக்கேற்ற உணவு வகைகளும் கிடைக்கின்றன.

கேள்வி : உண்ணிகள் மற்றும் இதர பூச்சிகள் நாயைக் கடிக்காமலிருக்க அதன் உணவில் அதிக பூண்டைச் சேர்க்க வேண்டுமென்ற நம்பிக்கை நாய் வளர்ப்போர் மத்தியிலுள்ளது. இதற்கு விளக்கமென்ன?

பதில் : நாயின் உணவில் சிறிதளவு பூண்டைச் சேர்த்துக் கொடுப்பது சிறிது காலத்துக்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கலாம். அதிக அளவு நாயின் உணவில் பூண்டைச் சேர்த்தால் அது நஞ்சாகிவிடும். இதற்குப் பூண்டைச் சேர்க்காமலிருப்பதே நல்லது. உண்ணிகள் மற்றும் பூச்சிகளை நாயின் உடலிலிருந்து விரட்ட அவ்வப்பொழுது நாய்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஆலோசனை பெறுவது நல்லது.

கேள்வி : வேகவைக்காத முட்டையை நாய்களுக்குக் கொடுக்க கூடாது என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இது பற்றிய கருத்து என்ன?

பதில் : வேகவைக்காத முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள ‘அவிடின்’ எனும் பொருள் உடலிலுள்ள “பயோட்டின்” என்ற வைட்டமினைக் குறைத்துவிடும் என்பது அறிவியல் உண்மைதான். முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு பயோட்டின் வைட்டமின் சத்து உள்ளது. அதனால் வேகவைத்த முட்டையைக் கொடுப்பதே சிறந்தது.

கேள்வி : நாய் பச்சைப்புல்லை உண்ணுகிறது என்றால் அதற்கு வயிற்று வலி உள்ளது என்று அர்த்தம் என்று கூறுகிறார்கள். இது பற்றிய விளக்கம்?

பதில் : இதற்கு மருத்துவ ஆராய்ச்சியின் சான்றுகள் எதுவும் இல்லை. சலிப்பு ஒரு காணரமாக இருக்கலாமென நாய்களின் குணாதிசயங்கள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கேள்வி : நாட்டு நாய்களைவிட வெளிநாட்டு நாய் இனங்களே வளர்ப்பதற்கு ஏதுவானது என நம்பப்படுகிறது. அது உண்மையா?

பதில் : இதில் உண்மையில்லை. இந்த இரண்டு வகை நாய்களிடமும் பிடித்த மற்றும் பிடிக்காத குணாதிசயங்கள் உள்ளன. எந்த வகை நாய் இனம் வளர்ப்பதற்கு ஏதுவானது என்பது நாம் நாயிடமிருந்து என்ன எதிர்ப்பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது.

கேள்வி : வளர்ந்த நாய்களுக்குப் புதுவித திறமைகளைக் கற்றுக் கொடுக்க இயலாது. மற்றும் அது ஏற்றுக் கொள்ளாது என்கிறார்கள். அது உண்மையா?

பதில் : வளர்ந்த நாய்களும் வயதான நாய்களும் கூட அதற்குப் பயிற்சி அளிக்கும் முறையைப் பொறுத்து புதுத் திறமைகளைப் கற்றுக்கொள்கின்றன என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்

கேள்வி : நாய் வாலை ஆட்டிக் கொண்டிருப்பது அது மகிழ்ச்சியாக உள்ளது என்பதைக் குறிக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. இதில் உண்மையிருக்கிறதா?

பதில் : இது முழுவதம் உண்மையல்ல. பயம் கலந்த சூழல், எதிர்பார்ப்பு மற்றும் கோபத்துடன் தாக்கத் தயாராகுவது போன்ற சமயங்களிலும் கூட நாய் தன் வாலை ஆட்டுகிறது. எனவே நாய் வாலை ஆட்டினால் அது மகிழ்ச்சியாக உள்ளது என உறுதியாகக் கூற இயலாது.

கேள்வி : அயலின நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காகவும், மலம் கழிப்பதற்காகவும் அதன் மூக்கை வருடிக் கொடுக்க வேண்டுமா?

பதில் : அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை.

கேள்வி : நாயின் வறண்ட அல்லது சூடான மூக்கு அதற்கு நோய் தாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கிறது என்று நம்பப்படுகிறது. இது உண்மையா?

பதில் : நாயின் மூக்கு எப்பொழுதும் ஈரப்பதமாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதில்லை. சில சமயங்களில் மூக்கு வறண்டு இருப்பது சாதாரணமானது தான். இதுவே தொடர்ந்து காணப்பட்டால் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

கேள்வி : ஒரு நாய் சிறிய சப்தத்துடன் உருமிக் கொண்டு ஒருவரை நோக்கி வருகிறது என்றால் அது அவர் மீது ஆதிக்கம் செய்கிறது என்று அர்த்தம். இது சரியா?

பதில் : இது ஓரளவு உண்மையானது. இச்சமயங்களில் அதனை அமைதியுறச் செய்ய முயற்சி செய்யாமல் மெதுவாகப் பின்வாங்கி விடுவதே நல்லது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கேள்வி : ஆண் நாய்களின கெட்ட மற்றும் ஆதிக்க குணங்களை விரை நீக்க அறுவைச் சிகிச்சை (குடும்பக் கட்டுப்பாடு) மூலம் சரி செய்துவிடலாம் என்கிறார்கள். இது சரியா?

பதில் : விரை நீக்க அறுவைச் சிகிச்சை செய்வதனால் ஓரளவு ஆதிக்க குணங்கள் குறையலாம். எனினும் உறுதியாகச் சொல்ல முடியாது. அதனிடமுள்ள தேவையற்ற குணாதிசயங்களை விரை நீக்கம் செய்வது மூலம் சரிசெய்ய இயலாது.

கேள்வி : நாய் ஊளைவிடுவது, நாய் வளர்ப்போர் வீட்டிலோ அல்லது அப்பகுதியிலோ அசம்பாவிதம் ஏதோ நடக்கப் போவதற்கான அறிகுறி என்று நம்புகிறார்கள். இது பற்றிய உண்மை நிலை என்ன?

பதில் : இதில் எள்ளளவும் உண்மை இல்லை. ஏற்கனவே அனுபவப்பட்டவர்கள் சொன்னது ஒரு சம நேர நிகழ்வுதான். எனினும் பூகம்பம் சுனாமி போன்ற நில அதிர்வுகளை உருவாக்கும் இயற்கைப் பேரிடர் நடப்பதற்குச் சற்று முன்னால் நாய்கள் அமைதியற்ற நிலையில் ஊளையிட்டு கத்தியிருப்பதும் ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி : மேல்நோக்கி சுருண்ட வால் கொண்ட நாய்கள் வீட்டுக்குப் பொருந்தாதவை மற்றும் அதனால் வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும் என்று நாய் வளர்ப்போரால் நம்பப்படுகிறது. இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?

பதில் : சுருண்ட வால் கொண்ட நாய் வீட்டில் இருப்பதற்கும் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

கேள்வி : நாய்களினால் நிறங்களைப் பிரித்தறிய இயலாது என்கிறார்களே அது சரியா?

பதில் : தவறு. நாய்களால் நீலம், மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களைப் பிரித்தறிய இயலும்.

கேள்வி : எல்லா நாய்களும் பூனைகளை வெறுக்கின்றன. இது ஏன்?

பதில் : இதில் ஓரளவு உண்மை உள்ளது என்றாலும், முற்றிலும் ஏற்புடையது அல்ல. வாழ்விடச் சூழ்நிலைகளைப் பொறுத்து இரண்டும் சண்டையிடாமலும் இருக்கும்

கேள்வி : ஒரு முறையாவது குட்டி ஈன்ற பின்னரே பெண் நாயைக் கருத்தடைச் செய்ய வேண்டும். இது பற்றிய கருத்து?

பதில் : அவ்வாறு எந்த நிபந்தனைகளும் இல்லை. கருத்தடை செய்வதற்கு குட்டி ஈன்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கேள்வி : நாயின் உமிழ்நீர் நோய்க் கிருமி அழிக்கும் சக்தி பெற்றது எனவும் அதனை மனிதர்களின் காயங்களுக்குப் பூசிவிடலாம் என்று கூறுகிறார்கள். இந்தக் கூற்று உண்மையா?

பதில் : முற்காலத்தில் அப்படி நம்பப்பட்டது. எனினும் நாயின் உமிழ்நீர் மூலம் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே அவ்வாறு செய்ய வேண்டாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Saturday, 26 May 2018

நாய் வளர்ப்பு பாகம் - 8

செல்லப்பிராணிகளின் முதுமை மேலாண்மை :

1. முதுமை எது?
2. முதுமையடைந்த செல்லப்பிராணிகளில் ஏற்படும் நோய்கள்
3. உணவூட்டமுறை
4. பொதுவான முதுமை மேலாண்மை

வளர்ந்து வரும் கால்நடை மருத்துவத்தில் செல்லப்பிராணி வளர்ப்பு மிக அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது. பலபேர் அதிக விலை கொடுத்து நாய்க்குட்டி வாங்குகிறார்கள். இளமைப் பருவத்திலும், வளரும் பருவத்திலும் ஆர்வத்துடன் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் முதுமைக் காலங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவை முறையாகப் பராமரிக்கப்படாமல் இறந்து விடுவதாக அறியப்படுகிறது.

முதுமை எது?

செல்லப் பிராணிகளின் வளர்ச்சி நிலையானது அதன் இனத்தின் வகை, மரபு, உணவூட்ட முறை மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்து அமைகிறது. பொதுவாக நாய் மற்றும் பூனைகளின் வாழ்க்கையை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். குழந்தைப் பருவமானது பிறந்ததிலிருந்து 1 வயது வரையிலும், இடைப்பட்ட வளர்ச்சி நிலையானது 1 முதல் 8 வயது வரையிலும் மற்றும் முதுமை நிலையானது 8 வயதிற்குப் பிறகும் கணக்கிடப்படுகிறது.

கோல்ஸ்டன் (1989) அவர்களின் கூற்றின்படி செல்லப்பிராணிகளை அவற்றின் வயது மற்றும் எடையை கொண்டு முதுமை நிலையை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

* சிறிய நாய்கள் (9.07 கிலோ) 9 -13 வருடங்கள்

* நடுத்தர நாய்கள் (9.5 - 22.7 கிலோ) 9 -11.5 வருடங்கள்

* பெரிய நாய்கள் (23.1 – 40.8 கிலோ) 7.5 – 10.5 வருடங்கள்

* மாபெரும் நாய்கள் (40.8 கிலோ) 6 – 9 கிலோ

* பூனைகள் (பெரும்பாலான அமெரிக்கன் இனங்கள்) 8 – 10 வருடங்கள்

முதுமையடைந்த செல்லப்பிராணிகளில் ஏற்படும் நோய்கள் :

முதுமையடைந்த செல்லப்பிராணிகளில் புற்றுநோய், இதய நோய், கல்லீரல் நோய், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள், சிறநீரகச் செயலிழப்பு மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு :

மனிதர்களைப் போலவே செல்லப்பிராணிகளில் இந்த நோய் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் உடலின் கழிவுப்பொருட்கள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படாமல் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் போன்ற தேவையற்ற கழிவுப்பொருட்களின் அளவு அதிகரிப்பதால் அசட்டோனோமியா மற்றும் யுரீமியா (சிறநீர் இரத்தத்தில் கலந்த நிலை) ஏற்படுகிறது. அதிகமாக நீர் அருந்துதல், அதிக அளவில் சிறுநீர் வெளியேறுதல், வயிற்றுப்போக்கு, வாந்தி, பசியின்மை, உடல் எடை குறைதல், இரத்தச் சோகை, சோர்ந்து காணப்படுதல் மற்றும் வாய்ப்புண் ஆகிய நோய் காணப்படுதல் மற்றும் வாய்ப்புண் ஆகிய நோய் அறிகுறிகளைக் கொண்டு மருத்துவரிடம் சிகிச்சைப் பெறுவது அவசியமாகும்.

2. இரத்தச்சேர்க்கை இதயச் செயலிழப்பு :

செல்லப்பிராணி வளர்ப்போரால் ஆரம்ப காலத்திலேயே, இந்த நோயைக் கண்டறியப் போதுமான விழிப்புணர்வு இல்லாததால், இது அதிகளவில் காணப்படுகிறது. இதயச் செயலிழப்பு காரணமாக இரத்தம் இதயத்திலிருந்து வெளியேற்றப்படாமலும் உள்வாங்க முடியாமலும் இரத்தச் சேர்க்கை மற்றும் திரவக் கோர்வை நிலை ஏற்படுகிறது. உடற்பயிற்சி சகிப்பின்மை, குறைவாகச் சாப்பிடுதல், இருமல், வயிற்றில் நீர்க் கோர்த்தல், மயக்க நிலை, படுக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகளைக் கொண்டு இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். இறுதிக் கட்ட நோய் நிலைகளில் இறப்பு நேரிடும்.

3. பல் சம்பந்தப்பட்ட நோய்கள் :

பல் சம்பந்தப்பட்ட நோய்கள் வயதான செல்லப்பிராணிகளில் மிக அதிக அளவில் காணப்படக்கூடிய நோயாகும். அன்றாடம் பல்லைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் முற்றிலுமாகத் தடுக்கப்படக்கூடிய நோயாகும். நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் 3 வயதிலிருந்தே தொடங்கி விடுகின்றன. பாக்டீரியா பற்களிலும், பல் ஈறுகளிலும் தங்கிச் சேதத்தை ஏற்படுத்துவதால் கெட்ட சுவாசம், பற்சொத்தை, ஈரிலிருந்து இரத்தம் வடிதல், உணவு மெல்லும்போது வலி ஏற்படுதல் மற்றும் பற்சிதைவு ஆகிய அறிகுறிகள் காணப்படும். பற்களைச் சுத்தமாகப் பராமரித்தல், தினமும் பல் துலக்குதல், தரமிக்க உணவுப்பொருட்களை அளித்தல் மூலம் பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கலாம்.

4. புற்றுநோய் :

புற்றுநோய்களின் தாக்கம் வயதினைப் பொறுத்து அதிகமாகிறது. வயதான செல்லப்பிராணிகளில் பால் மடிப் புற்றுநோய், விதைப்பைப் புற்றுநோய் அதாவது செர்டோலி செல் புற்றுநோய் மற்றும் பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க வளரும் பருவத்திலேயே கருமுட்டை மற்றும் கருப்பை அகற்றுதல் மற்றும் விதை நீக்கம் செய்ய வேண்டும். கதிரியக்கச் சிகிச்சை மற்றும் தக்க வேதியியல் மருந்துகளையும் உபயோகப்படுத்தலாம்.

5. கருப்பைச் சீழ் :

கருப்பை அகற்றப்படாத வயதான பெண் நாய்களில் இது பொதுவாக காணப்படுகிறது. சினைப்பருவ காலம் முடிந்து 4-6 வாரத்திற்குப் பிறகு இது பொதுவாகக் காணப்படுகிறது. கருப்பைச் சீழ் கொண்ட செல்லப்பிராணிகளில் காய்ச்சல் உணவுண்ணாமை, வாந்தி, வயிற்றுப்போக்கு, அதிகமாக நீர் அருந்துதல், அதிகமாகச் சிறுநீர் வெளியேற்றுதல், கருப்பை வாய் திறந்த செல்லப்பிராணிகளில் இரத்தத்துடன் சீழ் கலந்து வடியும். கருப்பையை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் மிகச் சிறந்ததாகும்.

6. நீரிழிவு நோய் :

இது நடுத்தர வயது மற்றும் வயதான செல்லப்பிராணிகளில் அதிகம் காணப்படுகிறது. இரத்தத்திலும் சிறுநீரிலும் குளுக்கோஸ் அதிகமாகக் காணப்படும். அதிகமாக நீர் அருந்துதல், அதிகமாகச் சிறுநீர் வெளியேற்றுதல், உடல் எடை குறைதல் மற்றும் அதிகமாக உணவு உண்ணுதல் இந்த நோயின் வழக்கமான அறிகுறிகள் ஆகும். மருத்துவரின் ஆலோசனையின்படி உடல் எடை அதிகமுள்ள செல்லப்பிராணிகளில் குறைந்த கலோரிகள் உள்ள உணவும், நார்ச் சத்துக்கள் அதிகமுள்ள உணவும் மற்றும் உடல் எடை குறைவாக உள்ள செல்லப்பிராணிகளில் அதிக கலோரிகள் உள்ள உணவும், இன்சுலின் சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.

7. மூட்டு அழுகல் நோய் :

இது மூட்டைச் சுற்றியுள்ள குருத்தெலும்பு தேய்மானமடைவதால் வயதான செல்லப்பிராணிகளில் ஏற்படுகிறது. இதனால் நடப்பதில் தடுமாற்றம், வாதம் மற்றும் கடினமான நடை ஆகியவை காணப்படும். ஆரம்ப காலங்களிலே மருத்துவ ஆலோசனை பெறுவது மிக முக்கியமானதாகும்.

8. தைராய்டு சுரப்பி குறைந்த நிலை :

இது நாய்களில் அதிகளவில் தைராய்டு ஹார்மோனின் அளவு குறைவதால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட நாய்களில் சோர்வு, முடி கொட்டுதல், உடல் எடை கூடுதல், குளிர் தாங்காமை, இரத்தத்தில் அதிகக் கொழுப்பு காணப்படுதல், இரத்தச் சோகை, தோல் உணர்நிறமூட்டல் மற்றும் இதயச் செயலிழப்பு காணப்படும். ஆரம்ப காலங்களிலே உரிய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

உணவூட்டமுறை :

* வளரும் நிலையில் இருப்பவைகளில் ஊட்டச்சத்துகளின் தேவைப்பாடு 2-4 முறை முது நிலையிலிருப்பவைகளை விட அதிகம் தேவைப்படுகிறது.

* முதுமையடைந்த செல்லப்பிராணிகளில் உடல் எடையை கட்டுப்படுத்தக் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ள உணவும், அதிக அளவு நார்ச்சத்துள்ள உணவும் கொடுக்க வேண்டும்.

* ஆதிகப் புரதம் உள்ள உணவைக் கொடுக்கும்போது சிறுநீரகம் பாதிக்கப்பட்டுச் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

பொதுவான முதுமை மேலாண்மை :

* மனிதர்களைப் போலவே செல்லப் பிராணிகளிலும் முழு உடல் பரிசோதனை வருடத்திற்கு இரு முறை மேற்கொள்ள வேண்டும்.

* எளிதில் செரிமானமடையக் கூடிய உணவுப் பொருள்களையும், உடல் எடை அதிகமுள்ளவைகளில் குறைந்த கலோரிகள் உள்ள உணவுப்பொருள்களையும், உடல் மெலிந்தலைகளில் அதிக கலோரிகள் உள்ள உணவுப்பொருள்களையும் கொடுக்க வேண்டும்.

* போதுமான உடற்பயிற்சி அளிப்பதன் மூலமாகவும், செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதன் மூலமாகவும் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையைப் பெறுவதுடன், நடத்தை தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்கலாம்.

* முதுமைக் காலங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்க வளரும் பருவத்திலேயே விதை நீக்கம் செய்வதாலும், கருமுட்டை மற்றும் கருப்பையை அகற்றுவதாலும் பால்மடி, விதைப்பை மற்றும் பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய்களைத் தடுக்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Thursday, 24 May 2018

நாய் வளர்ப்பு பாகம் - 7

நாய்க் கண்காட்சி :

1. நாய் வகைக்கான அடையாளங்கள் சிறந்து விளங்குவதற்கான போட்டி
2. கீழ்ப்படிதலுக்கான போட்டி
3. நாய்க் கண்காட்சியில் விதிகள்
4. நாய் வகைகளின் தகுதிகள்
5. இந்திய நாய் வளர்ப்பு மன்றத்தின் (கென்னல் கிளப் ஆப் இந்தியா) நாய்க் கண்காட்சிகளில் கலந்துகொள்ளும் நாய்களின் வகைகள்
6. கண்காட்சியில் சிறந்த நாய் விருது

நாய்க் கண்காட்சி என்பது பலதரப்பட்ட நாய் வகைகள் பொதுமக்களுக்குத் காட்சிக்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி நாய்கள் மற்றும் நாய் வளர்ப்போருக்கான ஊக்குவிக்கும் போட்டி. இது பல்வேறு நாய் வகைகளையும் அதன் வகைகளுக்கான உடலமைப்பு செயல்திறன் மற்றும் மனோபபாவங்களை அறிந்து கொள்ளப் பயன்படுகிறது.

கண்காட்சித் தளத்தில் ஒரே வகையைச் சேர்ந்த பல நாய்கள் காட்சிப் படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட வகைக்கு உரிய பண்புகள், அடையாளங்கள் ஆகியவற்றால் சிறந்து விளங்கும் நாய் வெற்றி பெற்றதாகத் தேர்வு செய்யப்படுகிறது.

நாய்க் கண்காட்சியில் இரண்டு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது

1. நாயின் வகைக்கான அடையாளங்கள் சிறந்து விளங்குவதற்கான போட்டி.

2. கீழ்ப் படிதல் குணத்துக்கான போட்டி

இவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

நாய் வகைக்கான அடையாளங்கள் சிறந்து விளங்குவதற்கான போட்டி :

ஒரே வகையைச் சேர்ந்த நாய்கள் கண்காட்சி தளத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதற்கு இன வளையம் என்ற பெயர். பிறகு ஒரே குழுவைச் சேர்ந்த வேறுபட்ட நாய் வகைகள் காட்சிப்படுத்தப்படும். உதாரணத்துக்கு பணிக் குழுவைச் சேர்ந்த நாய்களான டாபர் மேன், பாக்சர், செயிண்ட் பெர்னார்டு போன்றவை ஒரே குழுவில் காட்சிப்படுத்தப்படும்.

கீழ்ப்படிதலுக்கான போட்டி :

பயிற்சியாளரின் உத்தரவிற்கு ஏற்ப நாய் பல செயல்களில் ஈடுபடும் திறன் இதில் பரிசீலிக்கப்படும். நிற்றல், அமருதல் பொருள்களை எடுத்துவருதல் போன்ற கட்டளைகளைச் செயல்படுத்தும் திறன், நுகரும் திறன், கட்டளையிட்ட பின் அசையாமல் சொன்ன இடத்திலேயே உட்கார்ந்திருத்தல் போன்ற கீழ்ப்படிதல் குணங்களைக் கொண்டு தேர்வு செய்யப்படும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

நாய்க் கண்காட்சியில் விதிகள் :

1. கண்காட்சியில் கலந்துகொள்ளும் நாயினத்தில் கலப்பினமில்லாத வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த நாய்களே பங்கேற்க முடியும். ஒவ்வொரு இனத்திலும் வயது மற்றும் பாலினத்தைச் சார்ந்து குழுக்கள் அமைத்து அதில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதியில் அந்தந்த வகையில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்படும்.

2. இந்தக் கண்காட்சியில் பங்குபெறும் அனைத்து நாய்களும் கென்னல் கிளப் ஆப் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

3. நாய்க் கண்காட்சிகள் அறிவிக்கும்போது அவற்றில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.

4. எந்தப் போட்டிப் பிரிவில் பங்கேற்க வேண்டுமோ அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும்.

5. பங்குபெறும் நாய்கள் மைக்ரோசிப் போட்டிருக்க வேண்டும்.

6. கண்காட்சியில் பங்கு கொள்ளும் அனைத்து நாய்களும் கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு அதற்கான சான்றுடன் வர வேண்டும். ஓழுங்கு கட்டுப்பாட்டுச் சோதனையில் பங்கேற்கும் நாய்களில் பெண் நாய்கள் சினைப்பருவத்தில் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அது மற்ற நாய்களின் கவனத்தைக் திசைதிருப்பி விடும். எனவே அந்த நாயின் உண்மையான செயல்திறனைக் கண்டறிய முடியாது.

சிறந்த நாய் இனத் தேர்வில் பங்கு பெறும் நாய்கள் சுகாதாரமாக எந்த நோயும் இல்லாதிருக்க வேண்டும். ஆண் நாய்களில் இரண்டு விரைகளும் ஸ்கொரோட்டம் என்ற தோல்பையில் சரியாக இறங்கி இருக்க வேண்டும்.

7. நாய்க கண்காட்சியில் நடுவர்கள், நாய்களை அவற்றின் வகைகளுக்கேற்ற பண்புகள், அடையாளங்கள் எந்த அளவிற்குப் பொருந்துகின்றன என்று தீர்மானித்துத் தேர்வு செய்வர். தேர்வுக்குழுவைச் சேர்ந்தவர்கள், கீழ்ப்படிதல் தேர்வில் நிபுணர்களாகவோ, அந்தந்த இனத்தின் சிறந்த நாயைத் தேர்ந்தெடுப்பதில் வல்லுநர்களாகவோ அல்லது குறிப்பிட்ட நாய் வகைகளில் நிபுணர்களாக இருப்பார்கள். தங்கள் கைகளால் நாயின் பற்கள், தசை, தோல் போன்றவற்றை ஆய்வு செய்வர். அவற்றின் நடை, ஓட்டம், தோற்றம் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள்.

நாய் வகைகளின் தகுதிகள் :

அந்தந்த நாய் வகைக்கு இருக்க வேண்டிய தகுதிகளைக் கொண்டு தான் நாய்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒரு நாய் வகைக்கு இருக்கக்கூடாத உடல் அமைப்பு மற்றும் குணங்கள் இருந்தால் அந்த நாய் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்துவிடும். உதாரணத்திற்கு ஜெர்மன் ஷெர்பர்டு, லேப்ரடார் போன்ற நாய்களுக்கு வால் சுருண்டு இருக்கக்கூடாது. பக் வகை நாய் உருளையாகக் குள்ளமாக, தோல் சுருக்கமாக, முகத்தோல் கருப்பாக, வால் சுருண்டு இருக்க வேண்டும்.

வெவ்வேறு நாய்கள் வகைகளின் தனித்துவத்தை அதனுடைய குணம், மனோபாவம், தோற்றம் போன்றவற்றைக் கொண்டு அந்தந்த வகை நாய்களின் செயல்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய இயலும். வலுவான முழுத்திறனையும் கண்டறிதல் அவசியம். எந்தவகை நாயாக இருந்தாலும், அதைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் ஆரோக்கியம், நலன், வலுவான முழுத்திறன் போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

இந்திய நாய் வளர்ப்பு மன்றத்தின் (கென்னல் கிளப் ஆப் இந்தியா) நாய்க் கண்காட்சிகளில் கலந்துகொள்ளும் நாய்களின் வகைகள் :

1. வேட்டை வகை நாய்கள் (ஹெளண்டு) :

ஆரம்ப காலத்தில் வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த நாய்களில் பார்க்கும் சக்தியும், நுகரும் திறனும் மிகுதியாக இருக்கும். அதில் பீகில் மற்றும் பிலட் ஹெளண்டு வகை நுகரும் சக்தி கொண்டவை. விப்பட் மற்றும் கெரேஹெள்ண்டு போன்ற வேட்டை நாய்கள் கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவை. இவ்வகை நாய்களுக்கு அதிக உடற்பயிற்சி தேவை. இவ்வகை நாய்கள் கம்பீரமாகவும், தனித்துவமாகவும் மற்றும நம்பிக்கைக்குரியதாகவும் உள்ள செல்லப் பிராணிகள்.

2. வேலைத்திறன் வகை நாய்கள் :

இவ்வகை நாய்கள் பாதுகாப்பு, தேடல் மற்றும் மீட்புப் பணிக்காகக் காலம் காலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாக்சர், கிரேட் டேன், செயின்ட் பெர்னாட்டு போன்ற நாய்கள் இவ்வகையில் அடங்கும். ஒதுக்கப்பட்ட பணிகளில் மிகுந்த திறனுடன் செயலாற்றும் சிறப்பு மிக்கவை.

3. விளையாட்டுத் தன்மை கொண்ட வகை நாய்கள் :

இவ்வகை நாய்கள் வீரவளையாட்டு மற்றும் மீட்டுக்கொடுக்கும் சாகசங்களைச் செய்யக் கூடியவை. இவ்வகை நாய்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை (1) மீட்பு நாய்கள் (2) ஸ்பேனியல் (3) இலக்குடன் குறிபார்த்து வேட்டையாடி மீட்கும் நாய்கள் (செட்டர்ஸ்). இவ்வகை நாய்களுக்கு உடற்பயிற்சியும் கவனிப்பும் அவசியம் வேண்டும்.

4. டெரியர் வகை நாய்கள் :

இவ்வகை நாய்கள் ஆரம்ப காலத்தில் பயிர்களைக் கொல்லும் பூச்சிகளை அழிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. இவை இதர விளங்குகளைத் தைரியத்துடனும், கடுமையாகவும் எதிர்கொள்ளக்கூடியவை. இவ்வகைநாய்கள் ஆதிகாலத்திலிருந்தே புகழ் பெற்று விளங்கியவை. இடைப்பட்ட காலத்தில் எழுத்தாளர்களாலும், ஓவியர்களாலும் பாராட்டப்பட்டவை. இந்நாய்கள் தற்போது அனைவரையும் வேடிக்கையாக மகிழ்வித்துக் கவரக்கூடியதாக இருந்ததாலும், நெருப்புப் போன்ற மனோபாவத்தைக் கொண்டவை.

5. பயன்பாடடு வகை நாய்கள் :

பல்வேறு உபயோகங்களுக்காக வளர்க்கப்படும் இந்நாய்கள் விளையாட்டுத்தனம் இல்லாத நாய்கள், புல்டாக், டால்மேசியன், ஜப்பானிய அகிடா, பூடுல் போன்ற நாய்கள இவ்வகையில் அடங்கும்.

6. ஆயர் வகை (பாஸ்டோரல்) நாய்கள் :

இவ்வகை நாய்கள் ஆடு, மாடு போன்றவற்றை மேய்க்கும்போது அவைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளக் கூடியவை. இவ்வகை நாய்களுக்கு வானிலை மாற்றங்களை எதிர்கொள்ள இரண்டு வகை தோல் மேற்பரப்பு இருக்கும்.

7. மொம்மை வகை நாய்கள் :

மடியில் வைத்துக்கொள்ளக்கூடிய சிறிய வகை நாய்கள், மனிதர்களுடன் மிகவும் நட்புடனும், அன்புடனும் வசீகரிக்கும் தன்மை கொண்டவை. இவ்வகை நாய்களுக்கு அதிக உடற்பயிற்சி தேவையில்லை. குறைவாகவே உண்ணக்கூடியவை மற்றும் மிகுந்த அறிவு கொண்டவை.

நாய் வளர்ப்போர் மேலே கூறிய வெவ்வேறு வகை நாய்களுக்கான போட்டியில் தங்கள் நாய்களைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது அதன் வயது, பாலினம், எந்தப் போட்டியில் கலந்துகொள்ளப்போகிறது என்பனவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

போட்டியில் நடுவர்கள் ஒவ்வொரு வகையில் வயதுப் பிரிவு, பாலினப்பிரிவு, போன்றவற்றில் சிறந்த நாய்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அதில் சிறந்த நாய்க்குட்டி, சிறந்த ஆண், சிறந்த பெண், அனைத்திலும் அந்த நாய் வகையிலே சிறந்த நாய் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பார்கள்.

கண்காட்சியில் சிறந்த நாய் விருது :

பல்வேறு வகைகளில் சிறந்தவையாகத் தீர்மானிக்கப்பட்ட அனைத்து வகை நாய்களும் ஓரே தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டு அதில் சிறந்த எட்டு நாய்கள் வரிசைப்படுத்தப்பட்டு வருதுகள் வழங்கப்படும். அதில் முதலாவதாகத் தேர்வு செய்யப்பட்ட நாய்க்கு கண்காட்சியின் சிறந்த நாய் விருது வழங்கப்படும். இது தவிர வெவ்வேறு வகை நாய்க்குட்டிகளில் சிறந்த நாய்க் குட்டியை தேர்ந்தெடுத்தும் விருது வழங்கப்படும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm