Saturday 28 October 2017

செம்மறி ஆட்டைத் தாக்கும் நோய்கள் :

1. கோமாரி நோய்
2. வெக்கை சார்பு நோய்
3. ஆட்டு அம்மை
4. நீலநாக்கு நோய்
5. அடைப்பான் நோய்
6. தொண்டை அடைப்பான்
7. துள்ளுமாரி நோய்
8. அக ஒட்டுண்ணிகள்
9. புற ஒட்டுண்ணிகள்
10. ஒரு செல் நுண்ணுயிரி நோய்கள்
11. குடற்புழு நீக்கம்
12. புருஸெல்லோசிஸ்
13. டெட்டானஸ் (அ) இரணஜன்னி
14. லிஸ்டிரியோசிஸ் (அ) சுழல் நோய்
15. விப்ரியோசிஸ் கருச்சிதைவு நோய்

1) கோமாரி நோய் அறிகுறிகள் :

நாக்கு, மடி மற்றும் குளம்புகளுக்கிடையில் கொப்புளமும் புண்ணும் காணப்படுதல், தீவனம் எடுக்க இயலாமை, காய்ச்சல், குட்டிகளில் இறப்பு, சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படுதல்.

சிகிச்சை :

சமையல்சோடா உப்புக் கலந்த நீரில் கால் மற்றும் வாய்ப்புண்களை கழுவி மருந்திடுதல்.போரிக் பவுடருடன் கிளிசரின் கலந்து வாயில் தடவவேண்டும்.

2) வெக்கை சார்பு நோய் :

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளைத் தாக்கும் மிகக்கொடிய தொற்றுநோய் ஆகும்.

அறிகுறிகள் :

வாய்ப்புண், மூச்சுத்திணறல், கழிச்சல், கண் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல், காய்ச்சல்.

தடுப்பு முறை :

தடுப்பூசி போடுதல் அவசியம்.

3) ஆட்டு அம்மை :

வெள்ளாடுகளை விட செம்மறியாடுகளையே அதிகம் தாக்குகிறது.

அறிகுறிகள் :

உதடு, மூக்கு, கண் இமை, காது, காலின் அடிப்பகுதி, மடி, இனப்பெருக்க உறுப்பு போன்ற இடங்களில் முத்துப்போன்ற அம்மைக் கொப்புளங்கள் காணப்படுதல், காய்ச்சல், உணவு உட்கொள்ளாமை.

4) நீலநாக்கு நோய் அறிகுறிகள் :

காய்ச்சல், சளி, தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், சளி கெட்டியாவதால் மூக்கடைப்பு ஏற்படுதல், நான்கு நாட்களில் உதடு, மூக்கு, நாக்கு, குளம்பின் மேல் பகுதி மற்றும் கீழ்த்தாடை வீங்குதல், நாக்கு நீல நிறமாக மாறுதல், தீவனம் உட்கொள்ளாமை மற்றும் ஒரு வாரத்தில் இறந்து விடுதல்.

சிகிச்சை :

போரிக் பவுடரைத் தேங்காய் எண்ணெயில் கலந்து, புண்ணுக்கு தினம் இரு முறை போடவேண்டும்.நோய் எதிர்ப்பு மருந்துகள் 5 நாட்களுக்குள் கொடுக்கவேண்டும்.மென்மையான தீவனங்களை கொடுக்கவேண்டும்.

நுண்ணுயிரி நோய்கள் :

5) அடைப்பான் நோய் அறிகுறிகள் :

எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாமல் திடீர் இறப்பு, இறந்தபின் ஆசனவாய், மூக்கு, காது போன்றவைகளிலிருந்து உறையாத கருஞ்சிவப்பு இரத்தம் வெளியேறுதல்.

தடுப்பு முறை :

இறந்த ஆடுகளை ஆழமாகக் குழிவெட்டி சுண்ணாம்புத் தூள் தெளித்து மூடிவிடவேண்டும். தடுப்பூசி போடுதல் அவசியம்.

6) தொண்டை அடைப்பான் :

அறிகுறிகள் :

பாதிக்கப்பட்ட ஆடுகளில் அதிகக் காய்ச்சல், மூச்சுவிட சிரமம், இருமல், கீழ்த்தாடையில் வீக்கம், திடீரென இறந்து விடுதல்.

சிகிச்சை :

ஆரம்பகால நோய்க்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்தல் மற்றும் நோய் தீர்க்கும் முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.

7) துள்ளுமாரி நோய் :

எல்லா வயது ஆடுகளையும் பாதிக்கும். ஆனால் இளம் வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. மழைக்குப்பின் புதிதாக முளைத்த பசுமையான புல் வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு இந்நோய் ஏற்படும்.

அறிகுறிகள் :

ஆடுகள் மேயாமல் சோர்ந்து வயிற்று வலியால் பற்களைக் கடிக்கும்.சாணம் இளகி, இரத்தம் கலந்திருக்கும்.ஆடுகள் நடக்கும் போது கால்கள் பின்னி, கழுத்து விரைத்து, கண்கள் பிதுங்கி, மயங்கி தலை சாய்ந்து கீழே விழும்.இறப்பதற்கு முன் வலிப்பு ஏற்பட்டு துள்ளி விழும்.

தடுப்பு முறைகள் :

சூரிய உதயத்திற்குப் பின் ஆடுகளை 1 மணி நேரம் கழித்து மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும்.பருவமழைக்கு முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.

ஒட்டுண்ணி நோய்கள் :

8) அக ஒட்டுண்ணிகள் :

ஈரல் புழு, இலைப்புழு, உருண்டைப் புழு வகையைச் சேர்ந்த வயிற்றுப்புழு மற்றும் பருப்புழுக்கல் ஆகும்.

பரவுதல் :

மேய்ச்சலின் போது ஆடுகளின் வயிற்றுக்குள் செல்கின்றன.

அறிகுறிகள் :

இரத்தசோகை, பசியின்மை, எடைக்குறைதல், தள்ளாடி நடத்தல், தாடை வீங்குதல், உரோமம் கொட்டுதல், வயிற்றுப்போக்கு.

தடுப்பு முறைகள் :

குடற்புழு நீக்கம் செய்தல்சாணத்தை அப்புறப்படுத்தி, தரையைக் கழுவுதல்கிருமி நாசினி மருந்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல்.

9) புற ஒட்டுண்ணிகள் :

உண்ணி, பேன், தெள்ளுப்பூச்சி மற்றும் சிற்றுண்ணிகள் (mite) ஆகும்.

பாதிப்புகள் :

தோல் தடித்தல், சொறி உண்டாகுதல், முடி உதிர்தல், இரத்த சோகை, இரத்த ஒட்டுண்ணிகள் பரவுதல், தேய்த்துக் கொள்ளுதல், கடித்துக் கொள்ளுதல், அஜீரணம், இளைத்து எடைக்குறைதல் போன்றவையாகும்.மருந்துக் குளியல், தெளித்தல் (அ) தூவுதல் முறை, இவற்றிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

மாலத்தியான் 0.5 சதவிகிதம்,
சுமித்தியான் 1/100 (தெளிக்கும் முறை)
பியூட்டாக்ஸ் 0.02 சதவிகிதம்
லிண்டேன் 0.03 சதவிகிதம்
ஐவர்மெக்டின் 0.2 மி.கி / கி.கி உடல் எடைக்கு

10) ஒரு செல் நுண்ணுயிரி நோய்கள் :

இவற்றில் இரத்தக் கழிச்சல் நோய் முக்கியமானதாகும். ஆட்டுக் குட்டிகளை அதிகம் தாக்கும்.

அறிகுறிகள் :

காய்ச்சல்சளி மற்றும் இரத்தத்துடன் கழிச்சல்வாலைத் தூக்கி முக்குதல்

தடுப்பு முறை :

தரை ஈரமில்லாமல் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.குட்டிகளுக்கு பாலில் ஆம்பரோலியம் கலந்துக் கொடுத்தல்குட்டிகள் சாணத்தை நக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அம்மோனியா 10 விழுக்காடு கொட்டிலில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.கன்று வீச்சு நோய்டெட்டானஸ் சுழல் நோய்

ஆடுகளின் எடை அதிகரிப்பதற்கும், குட்டிகளில் இறப்பை தவிர்க்கவும் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம்.

11) குடற்புழு நீக்க அட்டவணை :

ஆடுகளின் வயது :

பரிந்துரைகள் :

2வது மாதம் நாடாப்புழுக்களுக்கான மருந்து
3வது மாதம் நாடாப்புழுக்களுக்கான மருந்து
4வது மாதம் நாடாப்புழுக்களுக்கான மருந்து
5வது மாதம் உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
6வது மாதம் உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
9வது மாதம் உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
12வது மாதம் தட்டைப் புழுக்களுக்கான மருந்து

ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.

மாதம் :

பரிந்துரைகள் :

ஜனவரி - மார்ச் : தட்டைப்புழுவிற்கான மருந்து
ஏப்ரல் - ஜீன் : உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஜீலை - செப்டம்பர் : தட்டைப் புழுவிற்கான மருந்து
அக்டோபர் - டிசம்பர் : உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை.

ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.

12) புருஸெல்லோசிஸ் :

இது நுண்ணுயிரிகளால் விழிச்சவ்வு, இமைப்படலம் வழியாகவும் உணவு மூலமாகவும் பரவுகிறது. பாதிக்கப்பட்ட ஆட்டின் பால் கீழே சிந்தினாலும் அதிலுள்ள ஆயிரக்கணக்கான கிருமிகளால் பரவும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆட்டின் குட்டி இறந்து விடுவதால் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

அறிகுறிகள் :

இந்நோய் பாதிக்கப்பட்டால் சினையாட்டின் கரு கலைந்து விடலாம் அல்லது இரண்டு மூன்று மாதங்களில் கருவானது இறந்து பிறந்துவிடும். இது எளிதில் பரவக்கூடிய நோய் ஆதலால் அடுத்தடுத்து சினை ஆடுகள் வீச்சுக் குட்டிகளை ஈனும், இந்நோய் தாக்கப்பட்ட ஆடுகள் அடுத்து இனக்கலப்பு செய்வது கடினம், செய்தாலும் குட்டிகள் இறந்துபோகலாம்.

கட்டுப்படுத்தும் வழிகள் :

இந்நோய் பாதித்துள்ளதை தனிப்பட்ட சோதனைகள் மூலம் மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். நிலையற்ற காய்ச்சல் பாதித்த மனிதர்களாலும் இந்நோய் பரவ வாய்ப்புள்ளது, மடி வீக்கம் காணப்படுவதால் இனப்பெருக்க அளவு குறையும்.

இந்நோய்க்குச் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை ஆதலால், நோய்த்திறன் வீரியம் குறைக்கப்பட்ட, கிருமிகள் நீக்கப்பட்ட தடுப்பூசிகளைச் சரியான சமயத்தில் போடுதல் நலம். முறையான பராமரிப்பு முறைகளை மேற்கொள்ளல் அவசியம்.

13) டெட்டானஸ் (அ) இரணஜன்னி :

இது மனிதனில் அல்லது விலங்குகளில் ஏற்படும் காய்ச்சல் போன்ற நோய்களால் எளிதில் பரவக்கூடிய நோய் ஆகும்.

பரவல் :

காயங்கள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. காயங்களில் உள்ளக் கிருமிகளின் ஸ்போர்கள் எளிதில் வளர்ச்சியடைந்த பெருகுகின்றன. இவை சில விஷப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றை ஆடுகளின் உடல் எளிதில் கிரகித்துக் கொள்கிறது. மண், ஆட்டின் கழிவுகளில் உள்ள நுண்ணுயிர்கள் காயங்களில் தொற்றிக் கொள்கின்றன. இவை ஆட்டின் குடல் பகுதிகளுக்குச் சென்று நோயைப் பரப்பத் தேவையான விஷப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

அறிகுறிகள் :

இந்நோய் தாக்கியுள்ளதை அறிய, 3 நாட்களிலிருந்து 2 வாரங்கள் வரை ஆகலாம். இது பொதுவாக எல்லா கால்நடைகளையும் தாக்கினாலும், குதிரைகளிலும் செம்மறி ஆட்டுக் குட்டிகளிலும் அதிகமாகத் தாக்குகிறது.

இந்நோய்த் தாக்கிய ஆடுகளின் கழுத்து, தலை, வால் ஆகியவை விறைத்துக் கொள்ளும். ஆடுகள் நகர முடியாமல் அவதிப்படும். தசைகள் இழுத்துப் பிடித்துக் கொள்வதால் வலி இருக்கும். இவ்வாறு உடல் பகுதிகள் விறைத்துக் கொள்வது நோய் தாக்கி 12 மணியிலிருந்து 24 மணி நேரத்திற்குள் தெரியும். குட்டி 4-5 மாதத்தில் ஆட்டின் குட்டி இறந்து பிறக்கும். முடிவில் காதுகள் நேராகவும், மூக்குப் பகுதிகள் விரிந்தும், சவ்வுகள் நீட்டிக்கொண்டிருக்கும். வாய்கள் விறைத்துக் கொள்வதால் தீவனங்களை மெல்ல முடியாது. எனவே தான் இது ‘வாய்ப்பூட்டு’ நோய் எனப்படும்.

நோய்க்கட்டுப்பாடு :

சரியான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். காயடிக்கும் போது எந்த நோய்த் தொற்றும் இன்றிப் பார்த்துக் கொள்ளுதல் நலம். 3 வார இடைவெளிகளில் 2 ஊசிகள் அளித்து எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.

முதலில் விஷம் எதிர்ப்பு ஊசி போட்டுப் பின்பு காங்களுக்குச் சரியான சிகிச்சையளிக்க வேண்டும். பென்சிலின் மருந்து அளிப்பதும் நன்மை பயக்கும். பாதிக்கப்பட்ட ஆட்டைத் தனி இருட்டறையில் வயிற்றில் குழாய் உணவளித்துப் பராமரிக்கலாம்.

14) லிஸ்டிரியோசிஸ் (அ) சுழல் நோய் :

பரவல் :

இந்நோய் பரப்பும் கிருமிகள் சிறுநீர், பால், கழிவுகள் போன்ற கழிக்கப்பட்ட விலங்குகளின் கழிவுகளின் மூலம் பரவுகிறது. இது மனிதன் மற்றும் விலங்குக் கழிவுகளில் பல மாதங்கள் வரை வாழக்கூடியது. கால்நடைகளில் காணப்படும் இரத்தம் உறிஞ்சும் உனி போன்ற ஒட்டுண்ணிகளின் இரத்தத்திலும் இந்நோய்க் கிருமிகள் காணப்படுகின்றன.

அறிகுறிகள் :

குளிர் காலத் தொடக்கத்திலிருந்து தான் இந்நோய் பரவ ஆரம்பிக்கும். மூளைத் தண்டுவட ஏற்பட்டு தண்டுவட நரம்புப் பிடிப்பு ஏற்படும். ஆடுகள் குரல் வளை, தாடை போன்றவற்றில் தசைகள் பிடித்துக் கொள்வதால் பக்கவாதம் போன்று இருக்கும். பாதிப்பு அதிகமாக இல்லாத ஆடுகள் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். இரத்தத்தில் நுண்ணுயிரிகள் பெருகி மூளைக் காய்ச்சலை அதிகரிக்கும். பாதிக்கப்பட்ட சினை ஆடுகளின் குட்டி 4-5 மாதத்தில் இறந்து விடும். கோழிகளில் இந்நோய் தாக்கியவுடன் கழுத்துப்பிடிப்பு, கால்கள் தடுமாற்றம் போன்ற அறிகுறிகளுடன் இறந்து விடும்.

சிகிச்சை :

டெட்ராசைக்ளின் மருந்து கால்நடைகளில் செம்மறி ஆடுகளை விட நல்ல பயன் தருகிறது. இம்மருந்தை எவ்வளவு விரைவில் தருகிறோமோ அவ்வளவுக்கு பலன் கிடைக்கும். பாதிக்கப்படாத ஆடுகளைக் கொன்று புதைத்து விடுதல் மற்ற ஆடுகளுக்குப் பரவாமல் தடுக்க உதவும்.

15) விப்ரியோசிஸ் கருச்சிதைவு நோய் :

இந்நோய் ஆண் ஆடுகளின் இனப்பெருக்க உறுப்புகள் மூலமாக பரவுகிறது. பாதிக்கப்பட்ட கிடாக்கிலிருந்து எடுக்கப்பட்ட விந்தணுக்களில் இந்நோய் பரப்பும் கிருமிகள் அதிகம் காணப்படுகின்றன. விந்தணுவை சேகரித்து வைக்கும். மிகக்குறைந்த வெப்பநிலைகளில் கூட இவ்வுயிரிகள் உயிர் வாழக்கூடியவை. பாதிக்கப்பட்ட பெண் கால்நடைகளிலும் இந்நோய் காணப்படுகிறது.

அறிகுறிகள் :

மந்தையில் கால்டைகள் சினையாவது குறையும் போது தான் மலட்டுத்தன்மை பாதிப்பு தெரியவரும். முதல் முறை சினைக்கு வரும் மாடுகள் அதிக அளவில் இந்நோயால் பாதிக்கப்படுகின்றன. கரு கலைதல் அல்லது கரு இறந்து பிறத்தல் அல்லது 6வது மாதத்தில் அதிகமாக இருக்கும். பாதிக்கப்பட்ட பொலிக் கிடாக்களோ அவற்றின் விந்தணுக்களிலோ எந்த ஒரு மாற்றமும் தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட ஆடுகள் இனக்கலப்பு செய்யும் போது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பரவுகிறது. செம்மறியாடுகளில் பாதித்தவுடன் சினைப்பையிலிருந்து திரவம் வழிந்து சினைக் கால முடிவில் வீச்சுக் குட்டியாக வெளிவந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

குளோரடெட்ராசைக்ளின் போன்ற நோய்க்கிருமி கட்டுப்படுத்தியைப் பயன்படுத்துவதால் ஓரளவு எதிர்ப்புச் சக்தி கிடைக்கலாம். வீரியம் குறைந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி இதற்கு எதிர்ப்புச் சக்தியை பாதிக்கப்படாத ஆடுகளுக்குக் கொடுக்கலாம். எனினும் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சையளிப்பது கடினம்.ஆணினப்பெருக்க உறுப்பின உறையின் மீது நோய்க்கட்டுப்படுத்தும் மருந்துகளை அளிக்கலாம். பாதிக்கப்பட்ட பெட்டை ஆடுகளுக்கு சிகிச்கைகள் ஏதும் இல்லை.



Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete