Sunday 25 November 2018

``முதல்ல நான் விவசாயி; அதுக்கப்புறம்தான் அமைச்சர்லாம்!" - புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் வயலில் இறங்கி விவசாயம் செய்யும் படங்கள்தாம் தற்போது இணையத்தில் வைரல்.

புதுச்சேரியின் விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன். காரைக்கால் திருநள்ளாறு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவான இவர் அமைச்சராகப் பதவி வகித்தாலும் விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் என்பதால் எந்தவித ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இவரிடம் இருக்காது. அதனால் எவரும் இவரை எளிதில் அணுகி தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். நானும் ஒரு விவசாயிதான் என்று அடிக்கடி சொல்லும் இவர் விவசாயிகளுக்கான பிரச்னைகளை உணர்வுபூர்வமாக அணுகுபவர். விவசாயிகளைப் பாதிப்பது போன்ற சிறு தவறுகள் நடந்தாலும் துறை அதிகாரிகளை லெஃப்ட் ரைட் வாங்கி விடுவார். பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்த தூய்மை இந்தியா சேவையை ஏற்று அதிரடியாக கழிவு நீர் வாய்க்கால்களில் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக அந்தப் பணியை விளம்பரம் இல்லாமல் செய்ததால் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார்.

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பலமுறை இவரின் செயல்பாடுகளை வெளிப்படையாகப் பாராட்டிப் பேசியிருக்கிறார். தீவிர அரசியலில் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனக்குச் சொந்தமான வயலில் வேட்டியை மடித்துக்கொண்டு இறங்கிவிடுவார். அப்படித்தான் சமீபத்திலும் அம்பகரத்தூர் கிராமத்தில் இருக்கும் தனது நிலத்தில் மேலாடையின்றி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கினார். நாற்றுப் பறித்துக் கத்தை கட்டிப்போடுவது, தண்ணீர் பாய்ச்சி நிலத்தை சமன்படுத்துவது போன்ற இவரின் படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்தப் படங்களை தனது வாட்ஸ் அப்பில் வெளியிட்ட ஆளுநர் கிரண் பேடி ``பொருத்தமான பதவிக்கு ஏற்ற சரியான நபர் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன்” என்று பாராட்டியிருக்கிறார்.

அமைச்சர் கமலக்கண்ணனிடம் பேசினேன், ``விவசாயம்தான் எனது பிரதான தொழில். நடவு நடுவது முதல் அறுவடை வரைக்குமான பணிகளில் நிலத்தைச் சமன்படுத்துதல் என்பது மிக முக்கியமான ஒன்று. அதைச் சரியாகச் செய்யவில்லை என்றால் இரண்டு மூன்று விதங்களில் நமக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக நிலம் சமன்படுத்தப்படவில்லை என்றால் அதிகமாகத் தண்ணீர் வைப்பது போல ஆகிவிடும். பயிர்கள் ஒருபக்கத்தில் செழுமையாகவும் மறுபக்கத்தில் வளம் குன்றியும் காணப்படும். மேடான பகுதிகளில் களை உண்டாகும். அதேபோல ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் தண்ணீருடன் சேர்ந்து தாழ்வான பகுதியில் இறங்கி தேவைக்கு அதிகமாகச் சேர்ந்துவிடும். அந்தப் பகுதிகளில் அதிகமான வளம் ஏற்பட்டால் பூச்சிகளின் தாக்கமும் ஏற்படும். மொத்தப் பயிர்களையும் அது சேதமாக்கிவிடும். கடந்த முறை குறுவை பயிரிட்டபோது சரியாகச் சமன்படுத்தாததால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. பகல் முழுவதும் அரசுப் பணியே எனக்குச் சரியாக இருக்கும். அதனால் இரவு நேரங்களில்தான் எனது வயல்களைப் பார்வையிடுவேன். இரண்டு டார்ச் லைட்டுகளுடன் இரவு 10 மணி முதல் விடியற்காலை 3 மணி வரைக்கும் பயிர்களின் நிலை, அவற்றுக்கு என்னென்ன செய்ய வேண்டும் எனப் பார்வையிட்டுவிட்டு வந்துவிடுவேன். மறுநாள் காலையில் நிலத்தில் வேலை செய்பவர்களுக்கு போன் செய்து, களைகள் இருக்கும் இடம், தண்ணீர் எங்கே மடைமாற்ற வேண்டும், பூச்சிகள் இருக்கும் பகுதி என அனைத்தையும் அவர்களிடம் சொல்லி சரி செய்யச் சொல்வேன்.

அதற்கு அடுத்த வாரம் நான் செல்லும்போது நான் சொன்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டு இருக்கிறதா என இரவில் சென்று பார்வையிடுவேன். அமைச்சரான பிறகு பகல் நேரத்தில் வயலுக்குச் செல்ல முடிவதில்லை. அப்படியே இருசக்கர வாகனத்தில் சென்றாலும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு வந்துவிடும்படி இருக்கும். சமீபத்தில் நான் வயல்களைப் பார்வையிட்டபோது நிலத்தைச் சமன்படுத்தும் பணி சரியாகச் செய்யப்படவில்லை என்பது போல எனக்குத் தோன்றியது. அதனால் மதியம் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கும் நேரத்தில் வயலுக்குச் சென்றேன். அப்போது அங்கு தொழிலாளர்களும் வேலை செய்து கொண்டிருந்தனர். வரப்பில் நின்று வேலை வாங்கும் வழக்கமான முதலாளி இல்லைங்க நான். தொழிலாளர்களில் ஒருவனாக இறங்கி வேலை செய்யும் விவசாயி. வருடக் கணக்காக இதுதான் என் வழக்கம். இப்போதுதான் நான் அமைச்சர். எப்போதும் நான் விவசாயிதான். அப்படித்தான் அப்போதும் அவர்களுடன் பணியில் ஈடுபட்டேன். அதைத்தான் அங்கு வந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். வைரலாகிவிட்டது” என்றார்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Monday 19 November 2018

“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!”

அனுபவசாலிகளின் அசத்தல் பாடம்...

நஞ்சில்லாத காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில், தற்போது மாடித்தோட்டம் பரவலாகி வருகிறது. குறிப்பாக மாநகர, நகரப் பகுதிகளில் பரவலாகி வரும் மாடித்தோட்டங்கள் வீடுகளின் காய்கறித் தேவையை கணிசமாக நிறைவு செய்து வருகின்றன. இயற்கை ஆர்வலர்கள், இல்லத்தரசிகள், விவசாயம் சார்ந்த ஆர்வமுள்ளோர் எனப் பலரும் மாடித்தோட்டத்துக்கு மாறி வருகின்றனர். மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள், கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து வல்லுநர்கள் கூறிய விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

மாடித்தோட்டத்தில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த எக்ஸ்னோரா அமைப்பைச் சேர்ந்த பம்மல் இந்திரகுமார், “நடவு செய்யும்போது, மண்ணுடன் மாட்டுச் சாணத்தை கலந்து விதைத்தால், செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். காலையிலும், மாலையிலும் மாடித்தோட்டத்தைப் பராமரிப்பதே நமக்கு சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். குழாய் மூலம், தண்ணீர் விடும்போது அதிகம் வீணாகும். இப்படி அதிகமாக ஊற்றப்படும் தண்ணீரோடு உரச்சத்துக்களும் வெளியேறி விடும். இதனால், குறைவான அளவில் மண்ணை ஈரப்படுத்தும் அளவு மட்டுமே தண்ணீர் கொடுக்க வேண்டும். ஈரமான மண்ணோடு கூடிய மாடித்தோட்டப் பைகளை தரையில் நேரடியாக வைக்கும்போது, தளம் எப்போதும் ஈரமாகவே இருக்கும். இதனால் மாடியின் மேல்தளம் பழுதடைய வாய்ப்புண்டு. அதில் கவனம் தேவை.

செடிகளுக்கு பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தினால் செழிப்பாக வளரும். அறுவடை முடிந்த பிறகு ஒரு வாரம் தொட்டியைக் காய விட்டு மீண்டும் நடவு செய்ய வேண்டும். ரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும். நாட்டு விதைகளைப் பயன்படுத்துவது நல்லது. பஞ்சகவ்யா, சூடோமோனஸ்... போன்ற இயற்கை இடுபொருட்கள் தமிழ்நாட்டில், பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன.

வீட்டுத்தோட்டம் அமைப்பது என்பது, ஒவ்வொருவரின் அனுபவம், ஆர்வத்துக்கு தக்கப்படி மாறுபடும். விதைகளை மண்ணில் விதைத்த நாள் முதல் இயற்கையை உன்னிப்பாக கவனித்து வந்தால், நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இப்படி கற்றுக் கொள்வதன் மூலம், மாடித்தோட்ட விவசாயத்தில் நீங்களே நிபுணராகி விடுவீர்கள். முயற்சியும், அதை சார்ந்த கற்றுக்கொள்ளும் பயிற்சியுமே நம்முடைய தேவை” என்றார்.

சென்னை, ஆழ்வார்திருநகரில் மாடித்தோட்டம் அமைத்திருக்கும் சுப, “தக்காளி, கத்திரி, மிளகாய் போன்றவற்றை குழித்தட்டில் நாற்று விடும்போது, ஒரு குழிக்கு ஒரு விதை வீதம்தான் விதைக்க வேண்டும். நாற்றுகளைத் தயார் செய்ய கொட்டாங்குச்சிகளையும் பயன்படுத்தலாம். குழிகள் 2 அங்குலத்தில் இருந்து 5 அங்குலம் வரை ஆழம் கொண்டவையாக இருக்க வேண்டும். நாற்று வளர்க்கும் குழித்தட்டு அல்லது கொட்டாங்குச்சியில் அதிகப்படியான நீர் வெளியேற துளை இருக்க வேண்டும். அதிகப்படியான நீர் இருந்தால், வேர்கள் அழுகி விடும். குழிகளில் மாட்டு எரு, செம்மண், தென்னை நார் ஆகிய மூன்றையும் கலந்து நிரப்பி விதைக்க வேண்டும்.

வளர்ந்த நாற்றுக்களை ஒரு தொட்டி அல்லது ஒரு பைக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடலாம். பைகளில் மாட்டு எரு, செம்மண், தென்னை நார் ஆகிய மூன்றையும் கலந்து நிரப்பும்போது விளிம்பில் இருந்து ஒரு அங்குலம் இடைவெளி இருக்குமாறு நிரப்ப வேண்டும். இந்தப் பைகளின் அடியிலும் துளைகள் அவசியம்.

தேமோர்க்கரைசல், வேப்பம் பிண்ணாக்குக் கரைசல் ஆகியவற்றை வாரம் ஒரு முறை மாற்றி மாற்றி தெளித்து வந்தால், வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிவிரட்டியாகவும் செயல்படும். நிலத்தில் விளையக்கூடிய காய்கறிகளை விட மாடித்தோட்டத்தில் விளையக்கூடிய காய்கறிகளுக்கு நோய்த்தொற்று குறைவாகத்தான் இருக்கும். ஒரு செடியில் ஒரு சுற்று அறுவடை முடிந்தவுடன்... மண்ணில் சிறிது வேப்பம் பிண்ணாக்கு இட்டு இரண்டு நாட்கள் காய வைத்து மீண்டும் பயன்படுத்தலாம். அறுவடை செய்யும்போது... தக்காளியை நன்கு பழுத்த நிலையிலும், அவரை, வெண்டை, கொத்தவரை, கத்திரி போன்றவற்றை இளம் காயாக இருக்கும் போதும் பறிக்க வேண்டும்” என்றார்.

தொடர்புக்கு :
இந்திரகுமார், செல்போன்: 994100-07057.
சுபஸ்ரீ, செல்போன்: 96771-01627

மாடித்தோட்டம்...கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்கள் தவிர, அனைத்து மாதங்களிலும் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம்.

பாலிதீன் விரிப்பின் மேல் தொட்டிகளை வைத்தால், தரையில் ஈரக்கசிவு இருக்காது.

கொட்டாங்குச்சிகள், மண் மற்றும் சிமெண்ட் தொட்டிகள், பாலிதீன் பைகள், வீட்டைச் சுற்றியுள்ள நிலம் ஆகியவற்றில் செடிகளை வளர்க்கலாம்.

மாடித்தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கும் இடம்... தினமும் 6 மணி நேரம் சூரிய ஒளி படும் இடமாக இருக்க வேண்டும். மாடி, மாடிப்படிகள், ஜன்னல் ஓரங்கள் என எங்கு வேண்டுமானாலும் செடிகள் வளர்க்கலாம்.

தொட்டிகள், பைகளில் ஒரு பங்கு வளமான செம்மண் அல்லது வண்டல் மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு தொழுவுரம் ஆகிய மூன்றையும் நன்றாகக் கலந்து, தண்ணீர் தெளித்து நடவு செய்ய வேண்டும்.

தயார் நிலையில் கிடைக்கும் தேங்காய்நார்க்கட்டிகளோடு கூடிய செடி வளர்ப்புப் பைகளில்... 2 கிலோ தேங்காய்நார்க்கட்டிக்கு 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிததத்தில் ஊற்ற வேண்டும். நன்கு ஊறிய பிறகு, 2 கிலோ தொழுவுரம், தலா 10 கிராம் பாஸ்போ-பாக்டீரியா, அஸோஸ்பைரில்லம், சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து நன்றாகக் கிளறி பிறகே நடவு செய்யவேண்டும்.

மாடித்தோட்டத்தில் நாட்டு விதைகள் பயன்படுத்துவது நல்லது. நாட்டு விதைகள் கிடைக்காத பட்சத்தில், கலப்பின வீரிய ஒட்டு ரக விதைகளையும் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். தோட்டக்கலை துறை மூலம் வீரிய ஒட்டு ரக விதைகள்தான் வழங்கப்படுகின்றன.

கத்திரிக்காய், மிளகாய், தக்காளி, காலிஃப்ளவர், முட்டைகோஸ், நூக்கல் உள்ளிட்ட பயிர்களை நாற்று விட்டுத்தான் நடவு செய்ய வேண்டும். அப்போதுதான் காய்ப்பு நன்றாக இருக்கும்.

வெண்டை, முள்ளங்கி, கொத்தவரை, செடி அவரை மற்றும் கீரை வகைகளுக்கு விதைகளை ஓர் அங்குல ஆழத்தில் நேரடியாக விதைக்கலாம்.

மாடித்தோட்டத்தில் பயிர்களின் ஊட்டத்துக்கு பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசல் இதில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற கணக்கில் பயன்படுத்தலாம்.

தேவையற்ற களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். செடிகளில் நோய் தொற்று ஏற்பட்ட பகுதிகளையும் அப்புறப்படுத்துவது நல்லது.

நோய் மற்றும் பூச்சித்தாக்குதலில் இருந்து பாதுகாக்க...வேப்பெண்ணெய், வேப்பங்கொட்டைக் கரைசல், இஞ்சி-பூண்டுக் கரைசல், புகையிலைக் கரைசல், இதில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற கணக்கில் பயன்படுத்தலாம்.

காலை, மாலை வேளைகளில், மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து லேசாக தண்ணீர் தெளித்தாலே போதுமானது. தொட்டிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது. மழைக் காலங்களில் போதுமான ஈரம் இருப்பதால், செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டியதில்லை.

இயற்கை அங்காடிகளில் விசாரித்தால், இயற்கை உரங்கள், நாட்டு விதைகள் கிடைக்கும். மாநகரப் பகுதியில் உள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்கள், தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் மாடித்தோட்ட உபகரணங்கள், இடுபொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தேமோர்க் கரைசல், மீன் அமிலத்தை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். வேப்பெண்ணெய் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

தொட்டி, பைகளில் ஒரே மாதிரியான பயிர்களை திரும்பத் திரும்ப வளர்க்காமல் சுழற்சி முறையில் மாற்றி மாற்றி வளர்ப்பது நல்லது. இதனால் மண்ணில் சத்துக்கள் நிலைநிறுத்தப்படும்.

அறுவடை முடிந்த பிறகு, செடியை வேரோடு பிடுங்கிவிட வேண்டும்.

சாணம், மாட்டுச் சிறுநீர் கிடைக்கும் வாய்ப்புள்ளவர்கள் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், இஞ்சி-பூண்டுக் கரைசலை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம். மாநகர பகுதிகளை ஒட்டி கோசாலைகள் செயல்படுகின்றன. அங்கே அணுகினால் இந்த சாணம், மாட்டுச் சிறுநீர் கிடைக்கும். சில கோசாலைகள் பஞ்சகவ்யா, மண்புழு உரம், தொழுவுரத்தை நேரடியாகவும் விற்பனை செய்து வருகின்றன.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Monday 12 November 2018

இயற்கை முறையில் துவரை சாகுபடி :

1. நடவு முறை
2. ஊடுபயிர் சாகுபடி
3. களை மற்றும் நீர் மேலாண்மை
4. பயிர் பாதுகாப்பு முறைகள்

தமிழகத்தில் பயறு சாகுபடி வகைகளில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப் பயிறு, துவரை, கொண்டைக்கடலை ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இதில் உளுந்து, பாசிப்பயிறு போன்றவை குறைந்த நாள்களில் விளைச்சல் பெறுவதால், இதன் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. துவரைப் பயறு விளைச்சலுக்கு 105 முதல் 200 நாள்கள் வரை உள்ளதால், இதன் உற்பத்தித் திறன் அதிகமாகும். மேலும், உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் தொழில்நுட்ப நடவு முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.

துவரை சாகுபடியில் நடவுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் போதிய பயிர் எண்ணிக்கையைப் பராமரிப்பதுடன், குறைந்த விதையளவுடன் 1 ஏக்கருக்கு 1 கிலோ விதை போதுமானது. தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்துவதால் இறவையில் 1 ஏக்கருக்கு 500 முதல் 600 கிலோவும், மானாவாரியில் 1 ஏக்கருக்கு 300 முதல் 400 கிலோ வரை கூடுதல் மகசூலும் கிடைக்கும்.

துவரை நடவு செய்வதற்குத் தேவையான நாற்றாங்காலை குழித்தட்டு மற்றும் பாலித்தீன் பைகளில் வளர்த்து நடவு செய்யலாம். பெருங்கரை போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இதுபோன்ற நாற்றாங்கால் அமைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குழித்தட்டு நாற்றங்கால் முறையில் 200 காஜ் கருப்பு நிற குழித்தட்டுகள் அமைத்து, அக்குழிகளில் மக்கிய தென்னை நார்க் கழிவுகள் மற்றும் மணல் பயன்படுத்தப்படுகிறது. தட்டில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி வேர்கள் அழுகி விடாமல் இருந்திட 3 முதல் 4 துளைகள் போட வேண்டும். 15 நாள் வளர்ந்துள்ள நாற்றுகளை நடவு செய்திடலாம்.

இக்குழித் தட்டுகளில் 90 சதவீதம் பரப்பியுள்ள தென்னைநார் மற்றும் மணலில் குழி ஒன்றில் இரண்டு விதைகளை ஊன்ற வேண்டும். பூஞ்சாள நோய் தாக்குதலிலிருந்து நாற்றுகளைப் பாதுகாத்திட 1 கிலோ விதையுடன் 10 கிராம் சூடோமோனாஸ் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும். முளைத்த 10ஆம் நாளில் வீரியமான நாற்றை மட்டும் வைத்துவிட்டு, வலுவிழந்த நாற்றினை நீக்கி, ஒரு குழியில் ஒரு நாற்று மட்டும் இருக்குமாறு வைத்து பின்னர் நடவு செய்ய வேண்டும்.

நடவு முறை :

நடவு செய்வதற்கு 1 வாரத்திற்கு முன்பு தொழு உரம் இட்டு நடவு வயலைத் தயார் செய்திட வேண்டும். வரிசைக்கு வரிசை 5 அடி, செடிக்கு செடி 3 அடி இடைவெளியில் நாற்றுகள் நடுவதற்கு ஏதுவாக சிறு குழிகள் எடுக்க வேண்டும். 15 நாள்கள் வளர்ந்துள்ள நாற்றுகளை அந்த குழிகளில் நடவு செய்ய வேண்டும்.

ஊடுபயிர் சாகுபடி :

வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளி உள்ளதால், காலியாக உள்ள பரப்பில் ஊடுபயிராக உளுந்து, பாசிப் பயறு மற்றும் கடலை போன்ற பயிர்களைப் பயிர் செய்யலாம். இதனால் கூடுதல் மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம்.

களை மற்றும் நீர் மேலாண்மை :

* நடவு செய்த 20-ஆம் நாளில் கைக் களை எடுத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். தண்ணீர் தேங்கினாலும், பற்றாக்குறை ஏற்பட்டாலும் பயிரின் வளர்ச்சி பாதித்து, மகசூல் இழப்பு ஏற்படும். இதனால் நடவின்போதும், பூக்கள் மலரும்போதும், காய்கள் உருவாகும்போதும் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம்.

* நடவு செய்த 30ஆம் நாள் ஜீவாமிர்த கரைசல் தர வேண்டும். பூக்கும் தருணத்தில் பஞ்சகாவ்ய கரைசலை இலை வழியாக 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாகும்.

* துவரையின் நுனி மேல் நோக்கி வளர்ந்து கொண்டே செல்லும். இதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பக்கக் கிளைகள் தோன்றி, அதிக காய்கள் உருவாகும்.

* எனவே, நடவு செய்த 20 முதல் 30ஆம் நாள் ஒருமுறையும், 50ஆம் நாள் இரண்டாவது முறையும் நுனியைக் கிள்ளிவிடுவது அவசியம்.

பயிர் பாதுகாப்பு முறைகள் :

சரியான நேரத்தில் மண் அணைத்துக் கொடுக்க வேண்டும். பூச்சிகள் ஏதேனும் தென்பட்டால், வேப்பம் கொட்டை கரைசல், பூண்டு மற்றும் நொச்சி கரைசல் போன்றவற்றை வேளாண் துறையினரின் ஆலோசனைப்படி தெளிக்க வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Thursday 8 November 2018

கர்ண புறா :

கர்ண புறா என்பது பந்தயங்களில்

பயன்படுத்தப்படும் ஒரு வகை புறா இதன் கண்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் இதை வெள்ளிக்கண் என்பார்கள் , இது இயல்பாகவே கர்ணம் அடித்து பறக்ககுடியவை இவற்றை நன்கு பயிற்ச்சி கொடுபதன் மூலம் பந்தயங்களில் பறக்க விடலாம்.

பந்தய விதி முறைகள் :

* கர்ணபுறா பறக்க விட்டஉடன் மேலே எழுந்து கர்ணம் அடிக்க வேண்டும்

* அப்படியே தொடர்ந்து 5 மணி நேரம் பறக்க வேண்டும்

* 5 மணி நேரத்திற்கு 1 நிமிடம் குறைந்தாலும் அவுட் ல் சேர்கப்படும்

* அதேபோல் கீழே இறங்கும் போதும் கர்ணம் அடித்து இறங்க வேண்டும்

* புறாவின் உரிமையாளர் இரண்டு இடம் காண்பிக்க வேண்டும்

* அதில் ஒரு இடத்தில் புறா வந்து உட்கார வேண்டும் , வேறு இடத்தில் உட்கார்ந்தால் அவுட்ல் சேர்க்கப்படும்

* புறா வீட்டின் அருகாமையிலோ அல்லது தொலைவிலோ பறந்துகொண்டு இருக்கலாம்

* அப்படி தொலைவில் பறந்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை புறா வீட்டின் அருகமாயில் வந்து செல்வதை காண்பிக்க வேண்டும்

* அப்படி காண்பிக்காமல் விட்டால் அவுட் ல் சேர்கப்படும் .

* இதில் புறா பறந்த நேரம் மற்றும் அடித்த கர்ணம் ஆகியவறை வைத்து பரிசுகள் வழங்கபடும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

ஹோமர் புறா பந்தயம் :

* புறாக்களில் வேகமாக மற்றும் அதிக தூரம் பறக்கும் திறமை ஹோமர் புறாக்களுக்கு உண்டு

* இவற்றின் முக அமைப்பு அலகின் நுனியில் இருந்து தலை வரை நேர் கோடு போல் சமமாக இருக்கும்

* இதன் கண்களின் நிறம் சிகப்பு , பழுப்பு , வெள்ளை ,மஞ்சள் ஆகியவை கலந்து இருக்கும்

* இதன் கண்ணின் நிற அமைப்பை வைத்து அதன் திறமையை கணக்கிடுவர்

* ஒவ்வொரு ஊரிலும் இதற்கான கிளப் கள் இருக்கும்

* இவ்வகை புறாக்கள் குஞ்சு பருவத்தில் இருக்கும்போதே உரிமையாளர் பெயர் பொறித்த வளையமும் அந்த கிளப் ன் வளையமும் அதன் கால்களில் மாட்டி விடபடுகின்றன

* அது பறக்க ஆரம்பிக்கும்போது (இந்த பருவத்தை பட்டா என்பார்கள் ) முதலில் வீட்டின் அருகில் இருந்து பறக்க விடுவார்கள் அது தன் கூட்டை வந்தடையும்

* பின்பு நாட்கள் செல்ல செல்ல படிப்படியாக தூரத்தை அதிகப்படுத்தி பயிற்ச்சி கொடுப்பார்கள்

* இப்படியே 10km , 20km , 50km ,100km, 250km என பயிற்ச்சி கொடுப்பார்கள்

* பிறகு பந்தயத்திற்கு தயாராண புறாக்களை பந்தயத்தின் பொழுது கிளப் ல் ஒப்படைப்பார்கள்

* அதன் கால்களில் கிளப் ல் இருந்து பேண்டு அணிவிக்கபடும் அதன் உள் பகுதியில் ரகசிய எண் பொறிக்கப்பட்டிறுக்கும்

* பிறகு அந்த புறாக்களை பந்தய தூரத்திற்கு தகுந்த ஊர்களில் சென்று பறக்கவிட்டு விடுவார்கள்

* அந்த புறாக்கள் அங்கிருந்து வளர்த்தவர்வீட்டு கூண்டிற்கு வந்தடையும் புறாவின் உரிமையாளர் அதன் காலில் உள்ள பேண்டில் இருக்கும் இரகசிய எண்ணை கிளப்பிற்கு சொல்ல வேண்டும்

* அந்த நேரத்தை வைத்து எந்த புறா முதலில் வந்ததோ அதை வைத்து பரிசுகள் வழங்கப்படும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

அலங்கார புறாக்கள்: (Fancy Pigeon)
அலங்கார புறாக்களில் நிறைய வகைகள் உள்ளன இவைகள் பார்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் இவைகளை அதிகமக விரும்பி வளர்கின்றனர் அவைகளின் வகைகள் பின்வருமாறு..

ஃபேன் டைல் (மயில் புறா) Fantail pigeon :

புறாகளில் ஃபேன் டைல் மிகவும் அழகானவை அவற்றின் வால் தான் அழகு அது எப்போதும் மயில் தோகை விரிப்பது விரித்துகொண்டு இருக்கும் அதனால் தான் இவற்றை மயில் புறா என்பார்கள்.
ஃபேன் டைல் புறாவில் சில வகைகள் உள்ளன அவை :

1. இந்தியன் ஃபேன் டைல்
2. அமெரிக்கன் ஃபேன் டைல்
3. சில்கி ஃபேன் டைல்
4. கரகந்து ஃபேன் டைல்

இந்தியன் ஃபேன் டைல் :

இவற்றிற்க்கு தலையில் ஸ்பைக் போன்ற அமைப்பு இருக்கும் மேலும் கால்களில் பாம்ஸ் என்று சொல்லுவார்கள் (கால் விரல்களில் உள்ள இறக்கைகள்) அது இருக்கும் மேலும் இவை கழுத்தை ஆட்டிக்கொண்டே இருக்கும்.

அமெரிக்கன் ஃபேன் டைல் :

இவற்றின் வால் இறகுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மேலும் இவற்றிக்கு பெரும்பாலும் பாம்ஸ் காணப்படுவதில்லை அதே போன்று ஸ்பைக்காணப்படுவதில்லை.

சில்கி ஃபேன் டைல் :

இவற்றின் இறகுகள் பிரிபிரியாய் (silky) இருக்கும் ஆகவே இவற்றை சில்கி ஃபேன் டைல் என்பர்

கரகந்து ஃபேன் டைல் :

இவற்றின் வால் இறகுகள் பெரிதாக இருக்கும் அனால் இவை தன் வாலை மயில் போன்று விரித்திருக்காது.

ஜாகோபின் புறா : (Jacobin pigeon)

இவற்றின் சிறப்பம்சம் இவற்றின் கழுத்தை சுற்றி உள்ள இறகுகள் தான் மேலும் இதன் தலை மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும் .

கன்னியாஸ்திரி புறா :

கன்னியாஸ்திரி புறாக்கள் ஜாகோபின் புறாக்களை போன்றே இருக்கும் ஆனால் தலையை சுற்றியுள்ள இறகுகள் சற்று குறைவாக இருக்கும்.

சிராஜீ புறா :

சிராஜீ புறாவின் சிறப்பு என்னவென்றால் அதன் கண்களின் கீழே இருந்து வயிறு வரைக்கும் வெள்ளை நிறத்தில் இருக்கும், தலை மற்றும் இறக்கைகள் வேறு நிறத்தில் இருக்கும் இதன் கால்களில் பாம்ஸ் இருக்கும் இந்த புறாவை பெங்குன்யின் புறா என்றும் கூறுவார்கள்.

முஸ்கி புறா :

இவற்றின் சிறப்பு என்னவென்றால் இதன் தலை பெரும்பாலும் வெள்ளை நிறத்திலும் மற்றும் வெள்ளை கலந்த நிறத்திலும் இருக்கும் இதன் தலையில் ஸ்பைக் இருக்கும் இது தன் கழுத்தை எப்போதும் ஆட்டிக்கொண்டே இருக்கும் அதனால் இதை நெக் ஷேக்கர் என்றும் கூறுவார்கள்.

பிரில் பேக் புறா : (Fril Back Pigeon)

இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் இறக்கைகளில் உள்ள இறகுகள் சுருள் சுருளாய் இருக்கும் மேலும் இதற்கு கால்களில் பாம்ஸ் இருக்கும் அதிலும் சுருள்கள் இருக்கும்.

படாங்கு புறா :

இவற்றின் சிறப்பு அதன் மூக்கின் மேல் உள்ள பஞ்சு போன்ற அமைப்பு பெரியதாய் இருக்கும் மேலும் இதன் கண்களை சுற்றி சிகப்பு வலயங்கள் காணப்படும்.

கேரியர் புறா :

இந்த புறாக்கள் படாங்கு புறாக்களை போலவே இருக்கும் அனால் சற்று பெரியதாய் ஒல்லியாய் இருக்கும்.

கிங் புறா :

இவ்வகை புறாக்கள் பார்பதற்கு கோழி போன்ற வடிவில் இருக்கும் இது ஒரு அமெரிக்க புறா இனம் ஆகும்.

கட்ட மூக்கு ஹோமர் :

இவற்றின் சிறப்பு என்னவென்றால் இதன் அலகு சிறியதாய் இருக்கும் இவ்வகை புறாக்களும் ஹோமர் போன்று இல்லாவிட்டாலும் ஓரளவு நன்கு பறக்கக்கூடியவை.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm