Thursday 3 January 2019

பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் :

அறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற குறுகிய கால (60 முதல் 120 நாட்கள்) ரகங்கள், குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை. தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற மத்தியகால (130 முதல் 140 நாட்கள்) ரகங்கள், சம்பா பட்டத்துக்கு ஏற்றவை. மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா போன்ற நீண்டகால (140 முதல் 200 நாட்கள்)
ரகங்கள்.

ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது?

”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நவரைப் பட்டம்! :

* டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவரைப் பட்டம். இப்பட்டத்துக்கு 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்ட குறுகிய கால நெல் ரகங்கள் ஏற்றவை.

* திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப் புரம், திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, தேனி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக் கோட்டை ஆகிய மாவட்டங்களில் இப்பட் டத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

சொர்ணவாரிப் பட்டம்! :

* ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையி லான காலம், சொர்ணவாரிப் பட்டம். இதுவும், 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்ட குறுகிய கால நெல் ரகங்களுக்கு ஏற்ற பட்டம்.

* திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சொர்ணவாரிப்
பட்டத்தில் சாகுபடி நடக்கிறது.

கார் பட்டம்! :

* மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலம், கார் பட்டம். இதிலும் குறுகிய கால நெல் ரகங்கள்தான் சாகுபடி செய்யப்படுகிறது.

* திருநெல்வேலி, கன்னியா குமரி, தூத்துக்குடி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இப்பட்டத்தில் சாகுபடி நடக்கிறது.

குறுவைப் பட்டம்! :

* ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலம், குறுவைப் பட்டம். இதுவும் குறுகிய கால நெல் ரகங்களுக்கு ஏற்றது.

* திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக் கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடக்கிறது.

முன் சம்பா பட்டம்! :

* ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலம், முன் சம்பா பட்டம். இதில், 130 நாட்கள் முதல் 135 நாட்கள் வயது கொண்ட மத்திய கால மற்றும் நீண்டகால ரகங்களுக்கு ஏற்ற பட்டம்.

* திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், மதுரை, தேனி, ராமநாதபுரம், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இப்பட்டத்தில் நெல் சாகுபடி நடக்கிறது.

பின் தாளடி! :

* அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலம், பின்தாளடி பட்டம். 115 முதல் 120 நாட்கள் வயது கொண்ட குறுகிய கால நெல் ரகங்களை இப்பட்டத்தில் பயிரிடலாம்.

* தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பின் தாளடி சாகுபடி செய்யப்படுகிறது.

சம்பா பட்டம்! :

* ஆகஸ்ட் மாதம், சம்பா பட்டம். மத்திய கால ரகம் மற்றும் நீண்ட கால ரகங்கள் இப்பட்டத்துக்கு ஏற்றவை.

* தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சம்பா சாகுபடி நடக்கிறது.

பின் சம்பா/தாளடி/ பிசாணம் பின் பிசாணம்! :

* செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில காலம் பின் சம்பா பட்டம். இது தாளடி, பிசாணம் எனவும் சொல்லப்படுகிறது.

* மத்திய கால ரகம் மற்றும் அதற்குமேல் நீண்ட கால ரகங்களுக்கு ஏற்ற பட்டம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment