Sunday 4 February 2018


வெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு பாகம் - 3


தீவன மேலாண்மை :

* வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.

* கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.

* தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.

* ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.

* அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

குட்டி தீவனம் :

மக்காசோளம் - 37 கிலோ

பருப்பு வகைகள் - 15 கிலோ

புண்ணாக்கு - 25 கிலோ

கோதுமை தவிடு - 20 கிலோ

தாது உப்பு - 2.5 கிலோ

உப்பு - 0.5 கிலோ

மொத்தம் - 100 கிலோ

வளரும் ஆட்டு தீவனம் :

மக்காசோளம் - 15 கிலோ

பருப்பு வகைகள் - 37 கிலோ

புண்ணாக்கு - 10 கிலோ

கோதுமை தவிடு - 35 கிலோ

தாது உப்பு - 2 கிலோ

உப்பு - 1 கிலோ

மொத்தம் - 100 கிலோ

பால் கொடுக்கும் ஆட்டு தீவனம் :

மக்காசோளம் - 52 கிலோ

புண்ணாக்கு - 8 கிலோ

கோதுமை தவிடு - 37 கிலோ

தாது உப்பு - 2 கிலோ

உப்பு - 1 கிலோ

மொத்தம் - 100 கிலோ

சினை ஆட்டு தீவனம் :

மக்காசோளம் - 35 கிலோ

புண்ணாக்கு - 20 கிலோ

கோதுமை தவிடு - 42 கிலோ

தாது உப்பு - 2 கிலோ

உப்பு - 1 கிலோ

மொத்தம் - 100 கிலோ

* குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்

* வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்

* சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்

* தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.

* அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

கேள்வி பதில்கள் :

1. செம்மறி/வெள்ளாடுகளுக்கு அடர் தீவனம் கொடுப்பது அவசியமா

ஆடுகளுக்கு கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் அடர் தீவனம் அளிப்பது அவசியம்

போதிய அளவிற்கு தரமான தீவனப் பயிர்கள் கிடைக்காத நிலைமை கருவுற்றிருக்கும் காலத்தின் கடைசி பகுதி மற்றும் பால் கொடுக்கும் காலத்தின் முற்பகுதி ஆகிய சமயங்களில் அதிகமாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை அளிக்க அடர் தீவனம் அளித்தல் அவசியம்.

2. மேய்ச்சலுடன் எந்த வகை தீவனங்களை செம்மறி/வெள்ளாடுகளுக்கு கூடுதலாகத் தர வேண்டும்?

மேய்ச்சலுடன் ஆடுகளுக்கு கூடுதலாக அளிக்கக் கூடிய தீவனங்கள் :

i) கடலைக்கொடி

ii) மர இலைகள்

iii) பயறுவகைத் தீவனப் பயிர்கள்

iv) அடர் தீவனங்கள்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete