Wednesday 19 December 2018

தங்கச் சம்பா :

தங்கச் சம்பா 130 - 135 நாள் பயிர், இது 5 அடி வரை வளர கூடிய பயிர்.

தங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம் (Gold) போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு “தங்கச் சம்பா” என பெயர் வந்திருக்கும்.

தனித்துவம் :

தங்கச் சம்பா பாரம்பரிய நெல் வகை, சம்பா பட்டத்துக்கு ஏற்றது. ஐந்தடி வரை வளரும் தங்கச் சம்பா மோட்டா ரகம். மத்திய காலப் பயிர். இது, நூற்றி முப்பது நாட்களிலிருந்து, நூற்றி முப்பந்தைந்து நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ குணம் கொண்ட நெல் ரகம் இது. இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியது. வெள்ளை நிறம் உடையது.

ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்ய ஏற்ற இரகமான தங்கச் சம்பா.

தமிழகத்தில் பரவலாக இந்த நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ஏக்கருக்கு இருபது மூட்டை மகசூல் கிடைக்கும். அதிகபட்சம் ஏக்கருக்கு முப்பது மூட்டைவரை மகசூல் கிடைக்கும்.

தங்கச் சம்பா உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் (Glowing Face) ஜொலிக்கும்.

* நோய் எதிர்ப்பு (Immunity) திறனும் கொடுக்கும்.

* பல்(Teeth), இதயம் (Heart) வலுவாகும்.

* புரதம் (Protein), விட்டமின்கள் (Vitamin), தாது உப்புகள் (Mineral salts) உள்ள தங்கச் சம்பா அரிசியை உண்பதால் மேனி தங்கம் போல மினுமினுக்கும்.

* மனிதர்களின் வாழ்நாள் (Human life) அதிகரிக்கும்.

* உடல் திண்மை(Stamina) அதிகரிக்கும்.

* உடல் நிறம் (Colour complexion) கூடும்.

* ஆண் ஆற்றல் (Potency of male) அதிகரிக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment