வரப்புக் குடைஞ்சான் :
பெயர் காரணம் :
வரப்புக் குடைஞ்சான் (Varappu Kudainchan) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ‘சத்திரகுடி’ எனும் நாட்டுப்புற பகுதியில் பிரதானமாக பயிரிடப்படுகிறது. இது மூன்று மாதகாலப் பயிராகும். ஒரு ஏக்கருக்கு சுமார் 1000 கிலோ முதல், 1200 கிலோ வரையில் மகசூல் தரக்கூடியது.
நெற்பயிர்களின் வரப்பு வேர்கள்(Roots) முகடுகளை ஊடுருவி ஆழமாகச் செல்வதால் இந்த நெற்பயிருக்கு வரப்புக் குடைஞ்சான் எனப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
பொதுவாக இந்நெல் இரகம் செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் (புரட்டாசியின் நடுப்பகுதியில்) விதைத்து, சனவரியில் (தையில்) அறுவடைச் செய்யபடுகிறது. மேலும் இதே பின் சம்பா பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீண்டகால வகை நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
மானாவாரி நிலம் எனப்படும் புன்செய் நிலப்பரப்பில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய வரப்புக் குடைஞ்சான், அதிக உயரம் வளர்ந்து வைக்கோலைப் பெருக்கிக் கொடுக்கக்கூடியது.
தனித்துவம் :
* வரப்புக்குடைஞ்சான்னு ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும்.
* மானாவாரி நிலம் எனப்படும் புன்செய் நிலப்பரப்பில் வறட்சியைத் தங்கி வளரக்கூடிய வரப்புக் குடைஞ்சான், அதிக உயரம் வளர்ந்து வைக்கோலைப் பெருக்கிக் கொடுக்கக்கூடியது.
* வரப்புக் குடைஞ்சான் நெல்லின் மேல் தோல் கருப்பு நிறமாகவும், அதன் அரிசி சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது.
வரப்புக் குடைஞ்சான் உண்பதால் ஏற்படும் பயன்கள் :
* இரத்தசோகை (Anemia) வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது.
* மலச்சிக்கலிருந்து (Constipation) விடுபட முடியும்.
* உடல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
* நரம்புகள் (Nerves) வலுப்படும்.
Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
No comments:
Post a Comment