ஒரு ஏக்கர் (100 சென்ட்) நிலத்தில் தொடர்ச்சியாக வளர்க்கும் தீவனங்கள்
புல்வகைகள்:
கம்புநேப்பியர்,கினியா புல் - 40 சென்ட்
பயறுவகைகள் :
தட்டைபயறு,வேலிமசால்,குதிரைமசால் - 30 சென்ட்
தானியவகைகள் :
தீவனச்சோளம்,மக்காச்சோளம்,கம்பு - 20 சென்ட்
மரவகைகள் :
அகத்தி,சுபாபுல்,கிளைரிசிடியா - 10 சென்ட்
இதன் மூலம்....சராசரியாக 40 ஆடுகள், 5 மாடுகள் வளர்த்தமுடியும்.
தீவனப் பயிர்களின் நச்சுத் தன்மை :
தீவனச்சோளதில் நாற்று பருவத்தில் ஹைட்ரஜன் சைனேடு அதிகமாக இருக்கும்....பயிர் வளர வளர ஹைட்ரஜன் சைனேடு அளவுகுறையும்.
எனவே தீவனச்சோளத்தை 50 நாள் அல்லது பூத்த பிறகு அறுவடை செய்து தீவனமாக கொடுக்க வேண்டும்.
சுபாபுல்லில் மைமோசின் என்ற நச்சு உள்ளது எனவே அறுவடை செய்து சற்று உலர்ந்த நிலையில்,குறைந்த அளவே கொடுக்கவேண்டும்.
Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
No comments:
Post a Comment