Monday 20 March 2017

மாடித்தோட்டம்... செய்ய வேண்டியதும், செய்யக் கூடாதவையும்..!


* தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடைகாலம் முடிந்து ஜூன், ஜூலை மாதங்களுக்கு மேல் வீட்டுத்தோட்டம் அமைப்பது சிறந்தது.

* கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.

* வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும்.

* பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஊற்றவேண்டும்.

* பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சி விரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.

* கோடை காலத்தில் இரு முறையும் குளிர் காலத்தில் ஒரு முறையும் ஒரு பைக்கு ஒரு லிட்டர் நீர் ஊற்ற வேண்டும். காலை அல்லது மாலை நேரங்களில் மட்டுமே பாசனம் செய்ய வேண்டும்.

* மாடி தோட்டம் அமைப்பதன் மூலம் கோடைகாலங்களில் வீட்டின் உட்புறம் குளுர்ச்சியான சூழலே நிலவும்.

* கோடை காலங்களில் புதிதாக தோட்டம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.

* காய்கறி தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியை தேர்வு செய்ய கூடாது.

* பைகளை நேரடியாக தலத்தில் வைக்க கூடாது.

* பைகளை தயார் செய்தவுடன் விதைப்பு அல்லது நடவினை மேற்கொள்ளுதல் கூடாது.

* மாடித்தோட்டம் அல்லது வீட்டுத்தோட்டம் அமைக்க குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி நன்கு படும் இடமாக தேர்வு செய்ய வேண்டும்.

* பைகளை நெருக்கி வைக்க கூடாது.

* ரசாயன உரங்களுடன் உயிர் உரங்களை கலந்து இடக் கூடாது. (ரசாயன உரங்களை முற்றிலுமாக தவிர்ப்பது மிகவும் நல்லது)

* ரசாயன பூச்சி மற்றும் பூஞ்சண கொல்லிகளை பயன்படுத்த கூடாது.

* மழை காலங்களில் நீர் ஊற்ற கூடாது.

* தோட்டத்துக்கு தேர்வு செய்த இடத்தில் தளத்தை ஈரம் தங்காமல் இருக்க பாலித்தீன் விரிப்பினை தளத்தில் பரப்ப வேண்டும்.

* காய்கறி தோட்டம் போட முடிவு செய்தவுடன் பெரியதாக இடத்தை தேடி அலைய வேண்டாம். மொட்டை மாடியில் காய்கறி, படிகளில் கீரை, சன்னல் ஓரங்களில் ரோஜா என்று எல்லா வித செடிகளையும் நடலாம்.

* தேங்காய் துருவியதும் தூக்கி எறியும் கொட்டாங்குச்சியில் கீரை வளர்க்கலாம். தொட்டி, பாலிதீன் பை, நேரடியாக நிலத்தில் என எதில் செடி வளர்க்க வேண்டுமென்றாலும், அடிப்படையான சில விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

* நீங்கள் செடி வளர்க்க நினைக்கும் பையில் அல்லது நிலத்தில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண் கலவை தயார் ஆனதும் உடனே விதைக்க வேண்டும். 7-10 நாட்களில் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கி விடும். இதன் பிறகு விதைப்பு செய்தால் நல்ல விளைச்சல் நிச்சயம்.

* ரெடிமேடாக விற்கும் தேங்காய் நார்களை கூட வீட்டுத்தோட்டத்திற்கு பயன்படுத்தலாம். தேங்காய் நார் கழிவு கட்டியை, பாலிதீன் பையினை திறந்து உள்ளே வைக்க வேண்டும். அதில் பத்து லிட்டர் நீரை உள்ளேயே ஊற்ற வேண்டும்.

* நன்கு ஊறிய தேங்காய் நாருடன் 2 கிலோ தொழுவுரம் உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சண கொல்லிகளை தலா 10 கிராம் என்ற அளவில் கலந்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment