Saturday 14 April 2018

கறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள் :

1. மாடு உறுப்பு போட்டால் அதை பால் மரம் பார்த்து கட்டுவது
2. இறந்த கால்நடைகளை ஆற்றில் வீசுவது
3. சினை காலங்களில் அடர்திவனம் கொடுத்தால் கன்று தலை பெரிதாகிவிடும்
4. தடுப்பூசி போட்டால் கன்று விசிறி விடும்
5. சினை ஊசி மூலமாக பெண் கன்றை பெறலாம்
6. சினை ஊசி சார்ந்த தவறான நம்பிக்கைகள்

மாடு உறுப்பு போட்டால் அதை பால் மரம் பார்த்து கட்டுவது :

கறவை மாடு வளர்பவர்கள் மத்தியில் கிராமப்புறங்களில் ஒரு நம்பிகை உண்டு. அது என்னவென்றால் கன்று ஈன்றபின் மாடு உறுப்பு போடும் அதை பால் மரமாக பார்த்து கட்டினால் அந்த கறவை மாடு அதிக அளவு பால்கறக்கும் என்பதுதான். ஆனால் அது ஒரு தவறான நம்பிகை இப்படி செய்வதால் உண்மையில் என்ன நடக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். மரத்தில் கட்டப்பட்ட உறுப்பானது சில நாட்களுக்கு பிறகு துருநாற்றம் வீச ஆரம்பிக்கும் . அந்த துருநாற்றத்தால் தெருக்களில் உள்ள நாய்களின் கவனம் அதன் மேல் ஈர்க்கபடும். பின்னர் அந்த உறுப்பை நாய்கள் கடித்து தெருக்களில் இழுத்து செல்லும். இதன் முலமாக மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த வழியே செல்லும் மனிதர்களுக்கு இது ஒரு இடையுறாக உள்ளது .

என்ன செய்ய வேண்டும்?

கன்று ஈன்றபின் மாடு போடும் உறுப்பை ஆழமாக குழி தோண்டி புதைப்பது நல்லது . அந்த குழியில் உறுப்பை போட்டு அதனை சுற்றி மஞ்சள் மற்றும் உப்பு தெளிக்கவேண்டும் . பின்னர் மணலை கொண்டு அந்த குழியை மூட வேண்டும்.

இறந்த கால்நடைகளை ஆற்றில் வீசுவது :

கால்நடை வளர்ப்பவர்களிடையே மற்றொரு தவறான பழக்கம் உள்ளது. அது இறந்தபின் கால்நடைகளை ஓடும் ஆற்றில் விசுவது. இப்படி செய்வதால் ஆற்றினோரும் உள்ள எல்லா கிராமங்களுக்கும் நோய் பரவும் வாய்ப்புள்ளது . பெரும்பாலும் இறந்த கால்நடைகளை பற்றி எவரும் கால்நடை மருத்துவரிடம் தகவல் கொடுப்பதில்லை . இதனால் கோமாரி , அடைப்பான் போன்ற நோய்கள் பரவும் வாய்புள்ளது .

என்ன செய்ய வேண்டும்?

இறந்த கால்நடையை பற்றி கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுக்கவேண்டும். கால்நடை மருத்துவர் வந்து ஆய்வு செய்யும் வரை இறந்த கால்நடையை எதுவும் செய்ய கூடாது. இப்படி செய்வதால் கால்நடையின் இறப்பிற்கான காரணம் தெரிய வரும். கோமாரி மற்றும் அடைப்பான் போன்ற நோய்களால் கால்நடை இறந்திரிந்தால் மருத்துவரின் ஆலோசனையின்படி அதை அடக்கம் செய்யவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

சினை காலங்களில் அடர்திவனம் கொடுத்தால் கன்று தலை பெரிதாகிவிடும் :

கறவை மாடு வளர்ப்பவர்கள் பொதுவாக கறவை மாடுகளுக்கு மட்டும் தீவனம் அளிக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். கீடேரி கன்றுகளுக்கும், சினை பருவத்தில் உள்ள மாடுகளுக்கும் தீவனம் குறைவாகவே அளிக்கின்றனர். இது மட்டும் இல்லாமல் சினை பருவத்தில் உள்ள மாடுகளுக்கு அதிகம் தீவனம் கொடுத்தால் அது வயிற்றில் வளரும் கன்றின் தலையை பெரிதாகிவிடும் என்று நம்புகின்றனர்.

என்ன செய்ய வேண்டும்?

சினை பருவத்தில் உள்ள மாடுகளுக்கு கறவைமாடுகளுக்கு கொடுக்கும் தீவனத்தைவிட ஒரு படி கூடுதலாக கொடுக்கவேண்டும். இன்றைய கன்று நாளைய பசு என்பதர்கினங்க சினை மாடுகளுக்கு கூடுதல் தீவனம் கொடுக்கவேண்டும். இப்படி செய்தால் கன்று நல்லபடியாக வளரும், உறுப்பு ஒழுங்காக போடும், பால் உற்பத்தியில் எந்தவித மாற்றமும் வராது. பிறக்கும் கன்று சரியான நேரத்தில் சினை பருவத்திற்கு வரும்.

தடுப்பூசி போட்டால் கன்று விசிறி விடும் :

தடுப்பூசி போடுவதால் பால் உற்பத்தி குறையும், சினை மாடுகள் கன்றை விசிறிவிடும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது . பொதுவாக தடுப்பூசி போடுவதால் மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் மாடுகளுக்கு இரண்டு முன்று நாட்களுக்கு சிறு காய்ச்சல் ஏற்படும். அதனால் பால் உற்பத்தியின் அளவு அந்த இரு நாட்களுக்கு மட்டும் குறையும். முன்றாவது நாளில் இருந்து பழைய நிலைமைக்கு திரும்பிவிடும். குறைந்த ஆரோக்கியம் கொண்ட பசுக்களே கன்றை விசிறும் நிலைமை ஏற்படும். அதுவும் லட்சத்தில் ஒரு கன்றே விசிறபடுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

வருடம் இருமுறை தவறாமல் கோமாரி நோய்க்கான தடுப்பூசியை முன்று மாதத்திற்கு மேல் உள்ள அனைத்து மாடுகளுக்கும் போட்டுக்கொள்ள வேண்டும் சினை ஊசி மூலமாக பெண் கன்றை பெறலாம்.

மக்களிடையே மற்றுமொரு தவறான நம்பிகை உள்ளது. அது சினை ஊசி மூலம் ஆண் அல்லது பெண் கன்றை தேர்வு செய்யலாம் என்பதாகும். இது அறிவியல் பூர்வமாக சாத்தியமில்லை. நம் வீட்டில் எந்த குழந்தை பிறக்க வேண்டும் என்று நம்மால் முடிவு செய்ய முடியாதோ. அதே போல் சினை ஊசி முலம் ஆண் அல்லது பெண் கன்றை தேர்வு செய்ய இயலாது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

சினை ஊசி சார்ந்த தவறான நம்பிக்கைகள் :

இரண்டு சினை போடுவதால் சினை பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்ற ஒரு நம்பிக்கை சமிப காலமாக நடைமுறையில் உள்ளது. இது மட்டும் இல்லாமல் சினை ஊசி போட்ட பிறகு காளை கட்டுதல், சினை ஊசி போட்ட பிறகு மாட்டின் தலையை தூக்கி கட்டிவைத்தல் ஆகியவை நடைமுறையில் காணப்படுகின்றது.

என்ன செய்ய வேண்டும்?

மாடு பருவத்தில் இருக்கும் பொது சினை ஊசி போட வேண்டும். சினை பருவத்தின் அறிகுறிகள் காலையில் தெரிந்தால் மலையிலும், மாலையில் தெரிந்தால் காலையிலும் சினை ஊசி போட படவேண்டும். மாடு சினை பிடிக்க ஒரு சினை ஊசியியே போதுமானது. சினை ஊசி போட்ட பிறகு காளை கட்ட அவசியம் இல்லை.

இவ்வாறு தவறான நம்பிக்கைகளை தவிர்த்து மேற்குறிப்பிட்ட தகவலை பின்பற்றினால் கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டலாம். நம் கால்நடைகளுக்கு எந்த வித தீங்கும் வராமல் பார்த்துகொள்ளலாம்.

ஆதாரம் : கால்நடை மற்றும் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment