கரும்பு விஞ்ஞானி டாக்டர்.அரு.சோலையப்பன் பதில் சொல்கிறார்.
''பனிக்கரும்பு, ரஸ்தாளிக்கரும்பு, செங்கரும்பு... என்று பொங்கல் கரும்புக்குப் பல பெயர்கள் உண்டு. பாரம்பர்ய ரகமான இந்தக் கரும்பு ரகம், பனிக் காலமான மார்கழியில் அறுவடை செய்யப்படுவதால் 'பனிக்கரும்பு' என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. நடுப்பட்டமான பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நடவு செய்தால், பொங்கல் சமயத்தில் அறுவடை செய்யலாம். பொங்கல் கரும்பில் நார்களின் அடர்த்தி குறைவாக இருக்கும். அதனால், கடித்து உண்பதற்கும் எளிதாக இருக்கும். ஆனால், இது ஆலையில் சரியாக அரைபடாமல் வழுக்கிக் கொண்டு விடும். அதோடு கணுக்களின் இடைவெளியும் குறைவாக இருப்பதால் இயந்திரத்தின் வேகமும் தடைபடும். அதனால்தான், கடித்து ருசிக்க இந்த ரகத்தையும், ஆலையில் ஆட்டி வெல்லம், சர்க்கரை போன்றவற்றைத் தயாரிக்க வேறு ரகத்தையும் பிரித்துப் பயிரிடும் முறையை ஏற்படுத்தியுள்ளனர்.''
Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
No comments:
Post a Comment