Saturday 17 March 2018

''பால் கறக்கும் மாடுகளுக்குக் கொம்பைச் சீவி விட்டால், பாலின் அளவு குறைந்து விடும் என்கிறார்கள். இது உண்மையா?''

ஓய்வுபெற்ற கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர், டாக்டர்.ஏ.ஆர். ஜெகத் நாராயணன் பதில் சொல்கிறார்.

''பால் மாடு வளர்ப்பவர்கள் மத்தியில் கொம்பு சீவினால் பால் கொடுக்காது என்ற நம்பிக்கை உள்ளது. அறிவியல் ரீதியாக இது உறுதி செய்யப்படவில்லை. மாறாக கொம்பு சீவி விடுவதாலும், சுட்டுவிடுவதாலும் மாடுகளுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதை என் பணி காலத்தில் பார்த்திருக்கிறேன். வழக்கமாக எருதுகளுக்கு கொம்புப் புற்றுநோய் ஏற்படும். சிலசமயம் அறுவை சிகிச்சை செய்தால்தான் புற்றுநோய் குணமாகும். இல்லையென்றால், காலம் முழுக்க கொம்பு புற்றுநோயால் மாடு அவதிப்படும். இதைத் தவிர்க்க கன்று போட்டவுடன் இளங்கன்றுகளின் கொம்புகளை சுட்டுவிட வேண்டும். இப்படி செய்வதால், எதிர்காலத்தில் கொம்புப் புற்றுநோய் வருவதைத் தடுக்க முடியும்.

சில கறவை மாடுகள் முட்டும் குணம் கொண்டதாக இருக்கும். பெண்கள், வயதானவர்கள் பால் கறக்க அச்சப்படுவார்கள். இதைத் தவிர்க்க கொம்பை சுட்டுவிட்டால் பயப்படாமல் பால் கறக்கலாம். கொம்பு சுட வேண்டும் என்று கால்நடை மருத்துவரிடம் சொன்னால் போதும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வார். சந்தையில் கொம்பு இல்லாத மாட்டுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.''

தொடர்புக்கு:அலைபேசி: 99442-69950.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment